
1992 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 75 ஆம் ஆண்டு விழா கவியரங்கம் சென்னை வாஹினி ஸ்டுடியோ வாஸவி மகாலில் நடைபெற்றது, கவியரங்கத்தலைவர் உவமைக்கவிஞர் சுரதா அவர்கள். அறந்தைத் திருமாறனைக் கவிபாட அழைத்தபோது;
வெண்பொன் | என்னும் | வெள்ளியைக் | காட்டிலும் |
செந்தீயில் | வெந்த | செம்பொன் | சிறந்தது; |
அல்லியைக் | காட்டிலும் | அரவிந்தம் | என்னும் |
பூத்தசெந் | தாமரைப் | பூவே | சிறந்தது! |
தெள்ளிய | திருத்தக்கத் | தேவரை | காட்டிலும் |
அம்புபட் | டிறந்த | கம்பனே | சிறந்தவன்! |
கூழுக்குப் | பாடினாள் | கூன்கிழவி | அவ்வை |
காசுக்குப் | பாடினான் | கம்பன், | நமது |
அன்பிற், | குரிய | அறந்தைத்திரு | மாறனோ |
ஏதும் | கேளாமல் | இனாமாய்ப் | பாடுவார்! |
வீட்டிலும் | தமிழ்ப்பணி! | வெளியிலும் | தமிழ்ப்பணி! |
ஏட்டிலும் | தமிழ்ப்பணி! | இவற்றைத் | தவிர |
நம்மவர்க்கு | முண்டோ | வேறு | நற்பணி! |
என்று | கேட்கும் | இந்தக் | கவிஞர் |
அறந்தைத் | திருமாறன் | பாடுவார் | இப்போ |