பொங்குமெழில் | கவியரங்கை | ஆள | வந்த |
புகழ்க்கவிஞர் | கணக்காயன் | கண்ம | தியன் |
சங்கம்வளர் | தமிழ்மார்சல் | முருகன் | காரைக் |
கிழாரோடு | அசோக்ராசு | தியாக | ராசன் |
மங்காத | தமிழிலக்கு | வனாரின் | மைந்தர் |
மானமிகு | திருவள்ளுவர் | சென்னை | ஆண்ட |
தங்குபுகழ் | சாகணேசன் | ஆண்டவ | ரோடு |
சவகர்லால் | ராஜேந்திரன் | டான்ஸ்ரீ | குமரன் |
டத்தோஸ்ரீ | சாமிவேலு | செங்குட் | டுவன் |
இரபியுதீன் | அயூப்போடு | சேக்அப் | துல்லா |
டத்தோஆம் | நடராஜா | அருளின் | தந்தை |
பேராயர் | எஸ்றாசற் | குணம்போன் | றோர்கள் |
இத்தேசம் | எத்தேசம் | தமிழி | ருக்கோ |
இவர்களங்கே | சிறந்திருப்பர் | பசீரலி | அப்பாஸ் |
உத்தேசம் | பலநண்பர் | பெயரைச் | சொல்லி |
உவந்துரைக்க | மனமுன்டு | நேரம் | இல்லை! |
Category: நன்றியுரை
களிப்புரை

கவிமாமணி – உனது |
கவி “மா” மணி! |
அறந்தைத்திருமாறா! நீ என்ன |
அன்னைத் தமிழின் ஆணிவேரா! |
அறந்தாங்கி நிற்கிறாய் – உன்பாட்டு |
வரந்தாங்கி நிற்கிறது! |
சீற்றம் ஏட்டிலுண்டு – தமிழுக்கு |
ஏற்றம் பாட்டிலுண்டு! |
மரபுக் கவிதை – உனக்கு |
உறவுக் கவிதையோ! |
காவியத் தமிழோ – உன்கவிதை |
ஓவியத் தமிழோ! |
உன்னை வரவேற்கும் – வருங்கால |
சென்னைத் திரையுலகம்! |
வாழ்கநீ பல்லாண்டு – |
வளமானதமிழ்ச் சொல்லாண்டு! |
நிமிர்ந்து |
நெஞ்சுயர்த்தி வாழ்த்தும் |
கவிஞர். காசி முத்துமாணிக்கம்





