இறைத்தமிழ் வாழ்த்து

பொன்னுக்கு நிறந்தந்தாய் பூவிற்கு மணம்தந்தாய்
பண்ணிற்குக் குளிர்தந்தாய்! பாவிற்குச் சுவைதந்தாய்!
மண்ணிற்கு வளந்தந்தாய்! மாக்கடற்கு நிறம்தந்தாய்!
விண்ணிற்கு ஒளிதந்தாய்! வியக்குமரும் பரம்பொருளே!
ஒலியாகி குரலாகி ஒலிக்குறிப்பு தானாகி
வலிவான சொல்லாகி வற்றாத ஊற்றாகி
மொழியாகி எழுத்தாகி மூப்பறியா இளமையொடு
விழிப்போடும் துடிப்போடும் விளங்குஞ்செந் தமிழ்த்தாயே!
எழுந்தாலும் விழுந்தாலும் கதிரின் வீச்சு
எங்கெங்கு வீழ்கிறதோ அங்கங் கெல்லாம்
பரந்தோங்கி வாழ்ந்திருக்கும் கன்னித் தாயே!
பைந்தமிழே வாழ்வரசி! வணங்கு கின்றேன்!
உன்னை வணங்குகிறேன்! உன்மகன்நான் என்பதனால்
என்வாக்கை உயர்வாக்கு! இருப்போரைக் களிப்பாக்கு!

Back to Top