Skip to content
| கொடு; | இல்லா | தவர்க்குநீ | கொடு! |
| குடும்பத்தை | வாழ்விக்கக் | கொடு! | – |
| வடு, | எவரும் | படாதிருக்கக் | கொடு:- |
| வடிக்குமுன் | காத்தவரை | வாழ்விக்கக் | கொடு! |
| பசித்துயரை | நீக்கிவிடக் | கொடு! | – |
| பார்வையிலே | அதையறிந்து | கொடு! | நீயும் |
| புசிக்கும் | போ | தும்பிறர்க்குக் | கொடு! |
| பூத்திருக்கும் | இறைமனமும் | பூத்திருக்கும் | கொடு! |
| பிறவியிலே | கண்ணில்லார் | காலில்லார் | உழைக்கக் |
| கையில்லார் | நிலையறிந்து | கருணையொடு | கொடு |
| உறவிழந்து | வயதிழந்து | நடைதளர்ந்த | பேர்க்கு |
| உன்னாலே | அவர்க்கியன்ற | உதவிகளைக் | கொடு! |
| கையில்லா | மயிலுக்குப் | போர்வைதர | வேண்டாம் |
| கையாலா | காநிலைபேர் | கண்டறிந்து | கொடு! |
| கொடிமுல்லை | படரவொரு | கொம்பின்றி | தேர் |
| குடிசையிலே | வறுமையிலே | குமுறுவோர்க்குக் | கொடு! |
| படிப்பதற்குப் | பணமின்றி | தவிப்பவர்க்குக் | கொடு! |
| பரதேசி | நிலைமாற | துணிவகைகள் | கொடு! |
| நொடிப்பொழுதில் | இரத்தம்அவர் | இறக்குமுன் | கொடு! |
| நோய்நொடியில் | தவிப்போர்க்கு | அதுநீங்க | கொடு! |
| கொடுப்பார்க்குச் | செல்வங்கள் | குறையாது | கொடு! |
| கொடுஉனக்கு | இறைவனள்ளிக் | கொடுத்தபொருள் | கொடு! |
| கொண்டுவந்த | தேதுஅவன் | கொடுக்காத | போது |
| கொண்டுநீ | போவதெங்கே | கொடுத்துவிடு | இங்கே! |
Back to Top