Skip to content
| கட்டிதந்த | கனுக்கரும்பே! | கயல்துள்ளும் | மைவிழியே! |
| கொட்டிவைத்த | முத்தழகே! | குலமகளே! | கனிமொழியே! |
| எட்டியிருந் | தென்மனதில் | இனிக்கின்ற | நல்லமுதே! |
| அட்டியில்லை | காந்தமென | சுற்றிடுவா | சீரழகே! |
| வான்நிலவு | உன்அக்காள்! | வண்மையில் | உன்தங்கை! |
| தேனுனக்குத் | தோழியடி! | தென்றலுனக் | கப்படித்தான்! |
| பூக்கூட்டம் | விண்மீன்உன் | பணிப்பெண்க | ளாகுமடி! |
| பேரழகே | இன்பசுகப் | பெட்டகமே | வாராயோ! |
| வெண்பாவின் | நடைதுள்ள | என்பாவாய் | நீ |
| பெண்பாவாய் | என்னுளத்தைப் | பெரும்பாலை | யாக்கிடாதே! |
| கண்பார்ப்பாய் | கண்மணியே! | களிசேர்ப்பாய் | என்வாழ்வில் |
| உன்பார்வை | என்பார்வை | ஒன்றாக்கு | மான்மகளே! |
| கோடியொரு | பூமலரும் | கோகிலக்கண் | நீதிறந்தால்! |
| ஆடிவரும் | அன்னம்தேர் | அசைபோடும் | உன்நடையில்! |
| பாடிவரும் | பூங்குயிலும் | பனிக்குளிரும் | உன்மொழியில்! |
| கூடிவர | வாழ்வுதரக் | கோதையேநீ | வந்துவிடு! |
| பூதளத்துப் | பொன்தனமே! | பூத்திருக்கும் | தாமரையே! |
| மாதரசி | மாணிக்க | மணிக்குலத்து | வாழ்வரசி! |
| தீதறியாத் | தென்தமிழே! | திராவிடத்துப் | பெரும்புகழே! |
| ஏதுமறி | யாயென்னை | ஏங்கவிடா | தேதேவி |
| முக்கனியின் | சாற்றைப்போல் | முத்தமிழின் | ஊற்றைப்போல் |
| எக்காலும் | வாழ்ந்திருப்போம் | ஏந்திழையே | வந்துவிடு |
| திக்கெல்லாம் | ஒளிகூட்டும் | தினகரனைச் | சாட்சிவைப்போம் |
| தக்கவைப்பாய் | என்னுயிரை | தந்துவிடு! | வந்துவிடு! |
Back to Top