Skip to content
| பொறுமையாக | வாழ்ந்துபாரு | போதும் – அதுவே |
| பொன்பொருள் | புகழ்தருமெப் | போதும்! |
| திறமையோடு | பெருமைகளை | சேர்ப்பாய் – இதைவுன் |
| சிந்தனையின் | வித்தாக | ஏற்பாய்! |
| | |
| | |
| அடக்கமது | வாழ்வுயர்த்தும் | சீரு – அன்பு |
| ஆட்சி;பள்ளம் | நிறைக்கவரும் | நீரு! |
| ஒழுக்கம்தான் | உனையுயர்த்தும் | பாரு – இதை |
| உயிரைவிட | உயர்ந்ததென்று | தேறு! |
| | |
| | |
| அடுத்தவர்க்கு | உதவுவது | பாண்மை – நல்ல |
| அறச்செயல்கள் | செய்வதுவே | மேன்மை! |
| கெடுத்தவர்க்கும் | நன்மைசெய்ய | தாண்மை – கெட்ட |
| கீழ்குணத்தார் | உறவறுத்தல் | கேண்மை! |
| | |
| | |
| கல்வியறி | வைப்பெருக்கு | நாளும் – அது |
| கற்றிடக்கற் | றிடப்பெருகிச் | சூழும்! |
| வளமையோடு | வலிமையுனை | ஆளும் – நல்ல |
| வழிநடந்தால் | செம்மைவழி | நீளும்! |
| | |
| | |
| குணமிருந்தால் | மனம் தருமே | மார்க்கம் – உன்னை |
| குன்றிலிட்ட | விளக்கைப்போ | லாக்கும்! |
| அனைவர்க்கும் | நன்மைசெய்யும் | நோக்கம் – இது |
| அடுத்ததலை | முறைக்குன்னைச் | சேர்க்கும்! |
Back to Top