Skip to content
| கண்ணுறக்கம் | போச்சுதடி | கள்ளியே | – உன்னைக் |
| காணத்தினம் | துடிக்கிறேனே | துள்ளியே! | |
| காத்திருக்கச் | சொன்னாயே | கன்னியே | – நீஏன் |
| கண்டுகொள்ள | வில்லையடி | என்னையே! | |
| | | |
| ஆத்தங்கரை | தோப்பினிலே | கிள்ளையே | – உன்னை |
| அணைத்திடவே | ஏங்குறேனே | முல்லையே! | |
| பார்த்தவிழி | பூத்ததடி | வள்ளியே | – என்னைப் |
| பார்த்தமலர் | சிரிக்குதடி | எள்ளியே! | |
| | | |
| ஜோடிப்புறா | கிளைதனிலே | கொஞ்சுது | – மான்கள் |
| சேர்ந்திணைந்து | புறாயினத்தை | மிஞ்சுது! | |
| நாடிமலர் | தேடிவண்டு | உண்ணுது | – உன்னை |
| நான்நினைத்தேன் | | மனதென்னவோ | பண்ணுது |
| | | |
| காமனுக்கும் | எனக்குமில்லை | வம்பு | – ஏனோ |
| கனைதொடுத்து | வீசுறானே | அம்பு! | |
| மாமனென்மேல் | உனக்கிலையோ | அன்பு | – தனியே |
| வாடுகிறேன்; | நீதருவாய் | தெம்பு! | |
| | | |
| குயிலும்தன் | துணையெண்ணிப் | பாடும் | – அந்தக் |
| குரல்கேட்டுப் | பெண்குயிலும் | நாடும்! | |
| மயில்கடை | மேகத்திற் | காடும் | – எனது |
| மனமோநீ | வரும்பாதை | தேடும்! | |
| | | |
| பிடிவாதம் | விட்டுவா | இங்கே | - உன்னைப் |
| பார்க்காமல் | வாழ்வதுநான் | எங்கே! | |
| வடிவழகே | தேடுகிறேன் | எங்கும் | – நீயும் |
| வந்தால்தான் | என்னுயிரும் | தங்கும் | |
Back to Top