| பொங்குமெழில் | கவியரங்கை | ஆள | வந்த |
| புகழ்க்கவிஞர் | கணக்காயன் | கண்ம | தியன் |
| சங்கம்வளர் | தமிழ்மார்சல் | முருகன் | காரைக் |
| கிழாரோடு | அசோக்ராசு | தியாக | ராசன் |
| மங்காத | தமிழிலக்கு | வனாரின் | மைந்தர் |
| மானமிகு | திருவள்ளுவர் | சென்னை | ஆண்ட |
| தங்குபுகழ் | சாகணேசன் | ஆண்டவ | ரோடு |
| சவகர்லால் | ராஜேந்திரன் | டான்ஸ்ரீ | குமரன் |
| டத்தோஸ்ரீ | சாமிவேலு | செங்குட் | டுவன் |
| இரபியுதீன் | அயூப்போடு | சேக்அப் | துல்லா |
| டத்தோஆம் | நடராஜா | அருளின் | தந்தை |
| பேராயர் | எஸ்றாசற் | குணம்போன் | றோர்கள் |
| இத்தேசம் | எத்தேசம் | தமிழி | ருக்கோ |
| இவர்களங்கே | சிறந்திருப்பர் | பசீரலி | அப்பாஸ் |
| உத்தேசம் | பலநண்பர் | பெயரைச் | சொல்லி |
| உவந்துரைக்க | மனமுன்டு | நேரம் | இல்லை! |
Category: நன்றியுரை
களிப்புரை

| கவிமாமணி – உனது |
| கவி “மா” மணி! |
| அறந்தைத்திருமாறா! நீ என்ன |
| அன்னைத் தமிழின் ஆணிவேரா! |
| அறந்தாங்கி நிற்கிறாய் – உன்பாட்டு |
| வரந்தாங்கி நிற்கிறது! |
| சீற்றம் ஏட்டிலுண்டு – தமிழுக்கு |
| ஏற்றம் பாட்டிலுண்டு! |
| மரபுக் கவிதை – உனக்கு |
| உறவுக் கவிதையோ! |
| காவியத் தமிழோ – உன்கவிதை |
| ஓவியத் தமிழோ! |
| உன்னை வரவேற்கும் – வருங்கால |
| சென்னைத் திரையுலகம்! |
| வாழ்கநீ பல்லாண்டு – |
| வளமானதமிழ்ச் சொல்லாண்டு! |
| நிமிர்ந்து |
| நெஞ்சுயர்த்தி வாழ்த்தும் |
கவிஞர். காசி முத்துமாணிக்கம்






