Skip to content
| இல்லை | இடை;அவள் | நடையில் | தெரியுது! |
| ஈக்காற் | றுக்கிவள் | இடையும் | நெளியுது! |
| பல்லினை | முத்தும் | பார்த்து | ஏங்குது! |
| பவளம் | செவ்விதழ் | நிறத்தில் | மயங்குது! |
| மார்பைப் | பார்த்து | மாங்கனி | மலைக்குது! |
| மணிமொழி | கேட்டிடத் | தேன்தவ | மிருக்குது! |
| கொள்ளை | அழகின் | குவியலோ | இவளுடல்! |
| கூறுவ | தெப்படி? | கூப்பிடு | கவிஞரை! |
| | | |
| | | |
| கண்ண | தாசன் | மருத | காசி |
| கவிஞர் | வாலி | பட்டுக் | கோட்டை |
| வைர | முத்து | உடுமலைக் | கவிஞர் |
| இவர்கள் | பார்வையில் | எப்படி | தப்பினாள் |
| செப்படி | வித்தை | மாயக் | காரியோ |
| ஈரே | ழுலகிலும் | இவள் | பேரழகியோ |
| தந்திர | மந்திர | புன்னகை | மோகினி |
| நால்வரில் | எவள்;இவள் | உருவில் | வந்தவள் |
| | | |
| | | |
| பஞ்சின் | மென்மைப் | பசுந்தளிர் | பாதம் |
| அன்ன | நடைபயின் | றசைந்து | குலுங்க |
| வஞ்சி | வந்தவள்; | வஞ்ச | மனத்தவள்! |
| நஞ்சு | போன்றவள்; | என்று | கம்பரும் |
| சூர்ப்பன | கைதனைச் | சுட்டிக் | காட்டினார்! |
| அந்த | அழகியோ | இங்கு | வந்தவள்! |
| பார்க்கும் | இடமெலாம் | பாவையின் | தோற்றம்! |
| | | |
| | | |
| பரவசம்; | நவரசம்; | பாய்ந்து | தாக்குதே! |
| மலர்ந்த | இவள்முகம் | மதியோ! | ரதியோ! |
| மாராப் | புக்குள் | குமுதமோ! | அமுதமோ! |
| வளர்ந்த | குழல்கரு | நாகமோ! | மேகமோ! |
| வாயிதழ் | உமிழ்நீர் | சுரபியோ! | அமுதமோ! |
| கண்க | ளென்ன | கணையோ! | வினையோ! |
| காலன் | தூதோ! | ஆலமோ! | சூலமோ! |
| பெண்கள் | இவள்முன் | எதிரியோ! | உதிரியோ! |
| பேரழ | கில்இவள் | மயிலோ! | புயலோ! |
| | | |
| | | |
| கள்ளப் | பார்வை | காந்தமோ! | சுடரோ! |
| உள்ளம் | உருகுதே! | உணர்வு | துடிக்குதே! |
| புன்சிரிப் | பெழிலோ | பொசுக்குதே! | எரிக்குதே! |
| போதை | ஏற்றியே | மயக்கிச் | சாய்க்குதே! |
| மாலைத் | தென்றல் | மனதை | ஆட்டுதே! |
| மதுவோ! | மாதோ! | சிந்தை | மயங்குதே! |
| முல்லை | மலர்க்கணை | தொடுத்து | மன்மதன்! |
| வில்லை | வளைத்தே | வீசுறான் | ஆயிரம்! |
Back to Top