Skip to content
| | | | |
| பூவாடை | எனைமயக்கத் | திரும்பிப் | பார்த்தேன் | |
| பொன்னோடை | எழில்மேனி | பொலிவு | கூட்டும் | |
| பாவடை | தாவணியின் | பருவ | மங்கை | |
| பார்வையிலே | சுருக்கிட்டு | எனையி | ழுத்தாள்! | |
| மாவாட்டும் | கற்குழவி | யாகி | எந்தன் | |
| மனஞ்சுழல | உணர்வுந்த | ஆர்வத் | தாலே | |
| நாவாட | நான்துணிந்தேன்; | அவளோ | மெல்ல | |
| நடைபெயர்ந்தாள்; | நான்தொடர்ந்தேன்; | கடலோ | பக்கம் | |
| | | | |
| பார்வையிலே | எனையிழந்தேன்; | கன்ன | லாளின் | |
| பசப்பினிலே | நினைவிழந்தேன்; | கொவ்வைச் | செந்தேன் | |
| கோர்வையிதழ்ச் | சிவப்பினிலே | செயலி | ழந்தேன் | |
| குலைக்கனியாம் | கன்னத்தை | மார்பைக் | கண்டு | |
| ஊர்வெளியைச் | சூழ்நிலையை | மறந்தே | போனேன்! | |
| உளறுமொழி | கிறுக்கனைப்போல் | புலம்ப | லானேன்! | |
| கூர்விழியாள் | கடற்கரையை | அடைந்த | போது | |
| குமுறுமுணர் | வோடங்கு | நானும் | சேர்ந்தேன்! | |
| | | | |
| நான்பார்த்தேன்; | மான்பார்த்துத் | திரும்பிக் | கொண்டாள்! | |
| நான்பார்க்காப் | பாவனையில் | திரும்பும் | போது | |
| மான்பார்த்தாள்; | நேர்க்கோட்டில் | விழிகள் | சேர | |
| மணிபார்த்தேன் | இரவெட்டு; | நிலவோ | நல்ல | |
| தேன்வார்த்து | ஒளிகொட்டும்; | அலைகள் | தாவும் | |
| திசைஎங்கும் | இன்பமோ | இன்பம் | என்றே | |
| தானார்த்துக் | காதலர்கள் | இளமை | வேகம் | |
| தணித்திருந்தார்; | நாங்களங்கே | தனித்தி | ருந்தோம் | |
Back to Top