Skip to content
| | | |
| | | |
| காதல் | என்பது | மாயம் | – அது |
| கண்கண் | மோதிய | காயம்! | |
| மதுவை | மயக்கும் | மோகம் | -காதல் |
| மறைந்து | போகும் | மேகம்! | |
| வயது | கொடுத்த | தாகம் | – அது |
| வரம்பு | மீறினால் | சோகம்! | |
| விதியை | மாற்றும் | வேகம் | – காதல் |
| விடைதான் | உணர்ச்சிப் | போகம்! | |
| கண்பொருள் | நோக்காப் | பார்வை | – மறைக்கும் |
| காதல் | தரும்திரைப் | போர்வை! | |
| முன்படு | பொருளறி | யாது | – காதில் |
| இருக்கப் | பறக்கும் | எண்ணம் | – அன்பின் |
| இன்பம் | சுரக்கும் | கிண்ணம்! | |
| உருக்க | உருகாத | உறவு | – காதல் |
| உறவைத் | துறந்து | ஓடும் | – காதல் |
| உறவு | ஒன்றையே | நாடும்! | |
| சிறகு | ஒடிபடும் | துன்பம் | – ஏற்கும் |
| தீபடு | துயரிலும் | இன்பம்! | |
| உணர்ச்சி | உயிர்களின் | சொத்து | – அதில் |
| ஒழுக்கம் | அடக்கம் | முத்து! | |
| புணர்ச்சி | இறைவன் | வேதம் | – அதன்படி |
| புரிந்து | வாழ்வதே | நீதம்! | |
Back to Top