Skip to content
| | | |
| | | |
| மூச்சை | யடக்கிநான் | மூழ்கி | எடுக்கவா |
| முத்துக் | கோர்க்கவா | கண்ணே! | |
| ஆழக் | கடலிலே | அமுத | கலசத்தின் |
| அழகை | ருசிக்கவா | பெண்ணே! | |
| காற்றுத் | திசையிலே | கடலின் | அலையிலே |
| கலத்தைச் | செலுத்தவா | கண்ணே! | |
| சேற்றுத் | தாமரை | சேர்சுரும் | பாகதேன் |
| ஊற்றில் | களிக்கவா | பெண்ணே! | |
| மந்த | மாலையில் | வந்த | தென்றலில் |
| சொந்தம் | கொண்டிடும் | சுகமே! | |
| சிந்து | பூந்தமிழ் | தந்த | சந்தமே |
| விந்தை | பூத்தபே | ரழகே! | |
| மோடி | இல்லைநீ | கோடி | மலர்கூடி |
| நாடி | உருவான | நங்கை! | |
| கோடி | சுகராகம் | பாடி | மயக்கும் நீ |
| தேடி | வளஞ்சேர்க்கும் | கங்கை! | |
| தங்க | நிலாவின் | தங்கை | நிலாநீ |
| தரையில் | மலர்ந்தபெண் | மாயம்! | |
| எங்கு | தழுவினும் | அங்கம் | சுகம்தரும் |
| அமுத | கலசநிறை | காயம்! | |
| தொடவும் | தொடருமே | தொடர | படருமே |
| விடவும் | சுடுமே | மோகம்! | |
| தொடவும் | முடியலே | விடவும் | முடியலே |
| அடடா | மீறுதே | தாகம்! | |
Back to Top