Skip to content
| ஆக்குவதும் | காப்பதுவும் | அழிப்ப | தெல்லாம் |
| ஆண்டவனின் | செயலென்று | அன்றே | சொன்னார்! |
| ஆக்குவது | அவன்செயல்தான்; | நம்மால் | இல்லை |
| ஆக்கியநல் | உயிர்,பொருளை | யார்காக் | கின்றார்! |
| ஆக்கமுடன் | உயிரினங்கள் | உழைத்து | ழைத்து |
| அரும்பாடாய் | உயிர்,பொருள்கள் | காக்கக் | கண்டோம் |
| நீக்கமற | இறையவனே | காப்பா | னென்றால் |
| நிறை,குறைகள் | நிந்தனைஏன்? | தீர்ப்பு | உண்டா? |
| | | |
| ஒருவன்மற் | றொருவனுயிர் | போக்கி | விட்டால் |
| ஊருலகம் | கொலைகாரன் | என்றே | சொல்லும்! |
| ஒருகொலைக்கே | சிறையுண்டு; | தூக்கு | உண்டு! |
| ஓருயிரா? | ஜப்பானில் | சென்டாய் | மினாமி |
| பெருநகரே | அழிந்துபட | சுனாமி | தந்த |
| பெருந்துரயம்; | இருபதினா | யிரவர் | மாண்டார்! |
| விரும்பித்தான் | இறைவன்கொலை | செய்கின் | றானா? |
| விடையிலையா? | பொறுப்பாளி | இதற்கில் | லையா? |
| | | |
| வீடுமுதல் | கார்கப்பல் | ரயில்வி | மானம் |
| விரிவாக்க | அணுவுலைகள் | பெட்ரோல் | டீசல் |
| தேடறிய | விஞ்ஞான | சாத | னங்கள் |
| திகைப்பூட்டும் | தொழில்நுட்பம்; | அனைத்தும் | வீழ்த்தி |
| நாடழித்துப் | போட்டசெயல் | நன்றோ; | தெய்வம் |
| நன்மைசெயத் | தானுண்டு; | இதுவோ | கொடுமை! |
| வாடிடுதே | மக்கள்மனம் | உலக | மெங்கும்! |
| வடிக்கிறதே | கண்ணீர்;இறை | அறிந்தா | லென்ன? |
| | | |
| போர்வெறிகொண் | டமெரிக்கா | ஜப்பான் | நாட்டில் |
| போட்டஅணு | குண்டாலே | மூன்று | லட்சம் |
| பேர்மாண்டார்; | ஹிரோஷிமா, | நாக | சாஹி, |
| பெருந்துயரைக் | கண்டது;பின் | மீள | லாச்சு! |
| வேரறுத்த | அமெரிக்கா | குனிய | லாச்சு! |
| வீழ்ந்துபட்ட | ஜப்பானோ | நிமிர | லாச்சு! |
| சீரழித்தாய் | சுனாமியே | ஜப்பான் | மீளும்! |
| சீருபெரும்; | பேருபெறும்; | உலகம் | காணும்! |
| | | |
| போனவுயிர் | மீண்டிடுமா? | பால்கு | டித்த |
| பிஞ்சுமுதல் | வயோதிகரை | அழிக்க | லாமா? |
| நாணமிலாச் | செயலன்றோ; | தெய்வத் | திற்கோ |
| நற்கருணை | சிறிதில்லை; | உலகே | தூற்றும் |
| ஈனசெயல்; | சுனாமியே | தாக்க | லாமா? |
| எங்கள்தமிழ் | நாட்டோடு | இலங்கை | சேர்த்து |
| போனமுறை | நீயழித்தாய்; | ஜப்பான் | இன்று |
| புதைகுழியாய் | மாறியதே | இனிவா | ராதே! |
| | | |
| சாகாமல் | வாழ்ந்தவர்கள் | யாரும் | இல்லை! |
| சாவுக்கும் | விதிமுறைகள் | வகுத்தாய் | நீயே |
| சாவுக்கு | அஞ்சியஞ்சும் | காலம் | போச்சு! |
| சாவுண்டு; | இதையறிந்தே | வாழு | கின்றோம்! |
| தீவுமுழு | தாய்அழித்தாய்; | ஜப்பான் | நாட்டார் |
| தீமையவர் | செய்ததென்ன? | கொடுமை | யன்றோ |
| சாதிக்கப் | பிறந்தவர்கள்; | ஜப்பான் | நாட்டை |
| சாவுலகு | அனுப்பிடினும் | மீண்டும் | வெல்வார்! |
Back to Top