Skip to content
| |
| |
| மூழ்கிமூழ்கி | முத்தெடுத்து |
| முதிர்ந்தமுத்தைத் | தேர்ந்தெடுத்து |
| முத்துப்பல்லுக் | காரி உனக்கு |
| அள்ளித்தருவேன் – | உன்னை |
| முத்துப்பல்லாக் | கேற்றிவைத்துச் |
| சுற்றி | வருவேன்! |
| |
| கட்டுக்கட்டா | கரும்பெடுத்து |
| கணுக்கணுவா | வெட்டியதில் |
| நடுக்கரும்பை | நானெடுத்து |
| உனக்குத் | தருவேன் – என் |
| நாடிநரம்பில் | நீமட்டும்தான் |
| நல்லாப் | பாரடி! |
| |
| மொட்டுமொட்டா | அரும்பெடுத்து |
| முல்லைமலர் | சரந்தொடுத்து |
| கட்டுக்குழல் | சூட்டுவேன்நான் |
| கண்ணே | கற்கண்டே– உன் |
| கழுத்தில்தாலி | கட்டுவேன்நான் |
| பெண்ணே | பூச்செண்டே! |
| |
| மாடுமனை | தோட்டமிருக்கு |
| மஞ்சள்கடலை | கரும்புக்காட்டில் |
| பஞ்சடியைப் | பதிக்கவாடி |
| பச்சைக்கிளியே – | எனக்குப் |
| பாலும்தேனும் | அழுதும்தாடி |
| இச்சைக் | கிளியே! |
| |
| தட்டித்தட்டி | தங்கத்திலே |
| தட்டுப்பாடு | இல்லாமலே |
| தட்டான்தந்தான் | நகைவகைகள் |
| தங்கரெத்தினமே – | உனக்கு |
| தாலிகூட | செய்துவிட்டேன் |
| பொண்ணு | ரெத்தினமே |
| |
| பட்டுப்பட்டா | காஞ்சிப்பட்டு |
| பலகடையிலே | தேடிஉனக்குக் |
| கட்டுக்கட்டா | சேலைவாங்கிக் |
| காத்திருக்கேன்டீ – | என்னை |
| காக்கவைக்க | லாகுமோஎதிர் |
| பார்த்திருக் | கேன்டீ! |
| |
| சுத்திச்சுத்தி | திலோத்தமைகள் |
| ஊர்வசிகள் | மேனகைகள் |
| மோகினிகள் | மயக்குறாங்க |
| அன்னக் | கிளியே – என்னை |
| அடைந்துசுகம் | தந்திடடீ |
| வண்ணக் | கிளியே! |
| |
| தைதையின்னு | தைவருது |
| தாளமேளம் | நாதஸ்வரம் |
| வைத்துனக்கு | மாலையிடுவேன் |
| வண்ணவண்ணமா – | ஊரார் |
| வாழ்த்துவார்கள் | நீயும்நானும் |
| வாழ்வோம் | திண்ணமா! |
Back to Top