Skip to content
| |
| |
| அந்திமாலை | வந்தபோது |
| அங்குதென்றால் | தொட்டபோது |
| இந்தமாமன் | நினைப்புனக்கு |
| வந்த | தில்லையா? |
| |
| தூக்கமின்றி | கண்தவிக்க |
| ஏக்கத்திலே | மனந்தவிக்க |
| தீக்குளித்த | உணர்விலே நீ |
| நொந்த | தில்லையா? |
| |
| கொந்தளிக்கும் | கடலைப் போல |
| குமுறுகின்ற | மேகம்போல |
| தத்தளிக்கும் | படகுபோல |
| ஆட | வில்லையா |
| |
| பொன்சிவந்த | முகத்தினிலே |
| பூ” சிதறும் | தேன்துளிபோல் |
| கண்கசிந்து | என்னையெண்ணி |
| வாட | வில்லையா? |
| |
| மன்மதனும் | வில்லெடுத்து |
| மலர்க்கணையை | வீசும்போது |
| உன்மனதில் | என்னுறவு |
| தீண்ட | வில்லையா? |
| |
| முல்லை” நீலம் | ‘மா’ அசோகு |
| தாமரைசேர் | ஐ மலர்கள் |
| மோக தாக | விரக வேகம் |
| தூண்ட | வில்லையா? |
| |
| ஆட்டிவைக்கும் | உணர்வு பொங்கி |
| அடங்கிடாமல் | மீறும் போது |
| போட்டிபோட்டு | என்நினைப்புத் |
| தாக்க | வில்லையா? |
| |
| பூகம்பத்தின் | நெருப்பலைகள் |
| சுனாமி போல | சீறிப்பாய்ந்து |
| புரட்டிப்போட்டு | வறுத்தெடுத்துத் |
| தீய்க்க | வில்லையா? |
| |
| மாது நீயும் | மனத்திரையில் |
| சூது கொண்டு | மறைத்திதனை |
| ஏதுமறி | யாதவள்போல் |
| ஏங்க | வில்லையா? |
| உண்டா – | இல்லையா? |
Back to Top