| என்னத்தைநான் சொல்லப்போறேன் அத்தானே – மனசு எதைநெனச்சோ குழம்பிப்போயி பித்தானேன். | |||
| கண்ணு | திறந்து | பார்த்து | இருக்குது |
| ஒன்னும் | தெரியலே – | இரண்டு | |
| காது | கூட | நல்லா | இருக்கு |
| ஒன்னும் | கேக்கலே! | ||
| உடலு | மட்டு | இங்கே | இருக்கு |
| உணர்வு | தெரியலே – | எந்த | |
| உறவும் | துறவும் | புரிய | வில்லை |
| ஒன்னும் | சரியில்லை! | ||
| பூவை | எடுத்து | முகர்ந்து | பார்த்தேன் |
| மணக்கவே | இல்லை – | வீட்டுப் | |
| பூஜை | அறையில் | வணங்கிப் | பார்த்தேன் |
| மனசு | தெளியலே! | ||
| சேலை | இடுப்பில் | சுற்றிப் | பார்த்தேன் |
| சொருக | முடியலே – | இங்கே | |
| சொந்தம் | பந்தம் | இருக்கு | றாங்க |
| நினைப்பிலே | இல்லே! | ||
| வயலில் | நெல்லு | விளைஞ்சு | கிடக்கு |
| அறுக்க | முடியலே – | அதைக் | |
| கட்டுக் | கட்டி | களத்து | மேட்டுலே |
| சேர்க்க | முடியலே | ||
| கதிரை | அடிச்சு | நெல்லு | மூட்டை |
| கட்ட | முடியலே – | அதைக் | |
| கவனத் | தோடு | வீடு | கொண்டு |
| சேர்க்க | முடியலே | ||
| மயக்க | முன்னு | சொல்லு | வாங்க |
| அதுவா | இருக்குமா – | இல்லை | |
| மாய | வேலை | சித்து | வேலை |
| இதுவா | இருக்குமா! | ||
| காத | லுன்னு | சொல்லு | வாங்க |
| அதுவா | இருக்குமா – | இந்தக் | |
| கதை | எனக்குப் | புரிய | லையே |
| சொல்லு | அத்தானே! | ||
| உன்னை | நினைச்சேன் | உன்னை | நினைச்சேன் |
| உறக்கமே | இல்லை – | உங்க | |
| ஒருத்த | ரையே | நினைச்ச | தாலே |
| உலகம் | தெரியலே! | ||
| கண்ணை | மூடி | இருந்தா | லுங்கள் |
| உருவம் | தெரியுதே – | தென்றல் | |
| காற்றைத் | தூது | அனுப்பு | றேன்நான் |
| வாங்க | அத்தானே! | ||
| தைய | லென்னைத் | தேடி | வாங்க |
| தைபொ | றக்குது – | எனக்கு | |
| தாலி | கட்டி | மாலை | சூட்டி |
| மனசைத் | தேத்துங்க. | ||
