Skip to content
| பஞ்சத்தை | ஓட்டிடுவார்; | மக்கள் | மீளப் |
| பகுத்தறிவை | ஊட்டிடுவார்; | துணிவைத் | தந்து |
| அஞ்சுநிலை | போக்கிடுவார்; | விழிப்பு | தந்து |
| அவலநிலை | நீக்கிடுவார்; | அடிமை | ஆண்டான் |
| கெஞ்சுநிலை | துறத்திடுவார்; | கீழும் | மேலும் |
| கெடுப்பவனின் | வேரறுப்பார்; | கொடியோர் | நாட்டில் |
| மிஞ்சுநிலை | தடுத்திடுவார்; | அவரைத் | தானே |
| மேதினியில் | மனிதரிலே | தெய்வம் | என்போம்! |
| கொத்தடிமை | ஒழித்தவரை; | கொடுமை | கண்டு |
| குமுறியெழும் | குணத்தவரை; | ஏழை | வாழ |
| நித்தமுழைக் | கின்றவரை; | நேர்மை | நீதி |
| நிலைக்கவழி | செய்பவரை; | உலகே | மெச்சும் |
| வித்தையிலே | வல்லவரை; | நாடு | ஓங்க |
| விடியலினைத் | தந்தவரை; | காலந் | தோறும் |
| முத்தமிழே; | ஆருயிரே; | அமுதே | என்று |
| மூவுலகும் | தலைவணங்கும் | மறுப்பா | ருண்டோ? |
| பசித்திருப்போர் | நிலையறிந்து | அதனைப் | போக்க |
| பாதைவழி | தேடியவர் | புத்த | ரென்போம்! |
| கசிந்துருகிப் | பயிர்வாட | தானும் | வாடும் |
| கருணைமனங் | கொண்டவர்தான் | ராம | லிங்கர்! |
| நசிந்துடலில் | நோயுற்ற | உயிருக் | காக |
| நற்புதுமை | நிகழ்த்தியவர் | ஏசு | நாதர்! |
| புசித்திடவே | புறாகேட்ட | வேட | னுக்குப் |
| பொன்னுடலைச் | “சிபி” | தந்தார்! | உண்டோ |
| சாந்தியொற்று | மையமைதி | சமத்து | வத்தைத் |
| தாரணிக்குத் | தந்து | “நபி” | நெறியில் |
| மாந்தரது | மடமையிருள் | போக்க | வந்த |
| மணிவிளக்கு | சாக்ரட்டீஸ் | லிங்கன் | கமால் |
| காநதி, | பெரி | யார்அண்ணா | திருவள் |
| காட்டும்வழி | நடந்துநல் | அறிவை | ஆள்வோர் |
| ஏந்துசுடர் | ஒளியினிலே | உலகே | உய்யும்! |
| ஏதுயினி | மானுடத்திற் | கிடர்பா | டேது? |
Back to Top