Skip to content
| |
| | |
| மேகமே | “வா” என் |
| வேதனை | கேளு! |
| மோகமோ | “தீ” ப்போல் |
| மூள்வதைப் | பாரு! |
| தாகமோ | மீறுது! |
| தனிமை | தகிக்கிது! |
| சோகமே | சூழுது! |
| சொல்அவ | ரிடத்தில்! |
| |
| பொங்குது | ஆசை! |
| புழுங்குது | உள்ளம்! |
| திங்குது | வேட்கை! |
| திகைக்குது | மனது! |
| எங்கிருப் | பாரோ |
| என்னுயிர் | அவரிடம்! |
| தங்கிடத் | தாங்கிடத் |
| தயக்கமேன் | வரச்சொல்! |
| |
| பறந்து | திரிகிறாய்! |
| பலஊர் | அலைகிறாய்! |
| மறந்தி | டாதே |
| மதிதவழ் | முகிலே! |
| பிறந்தேன் | அவர்க்கென |
| பிரிய | முடியுமோ! |
| இறந்து | படுமுன் |
| என்னிடம் | வரச்சொல்! |
| |
| தாகமோ | விரகமோ! |
| தாக்கிடும் | புயலோ! |
| வேகமோ | நாகமோ! |
| வில்விடு | வினையோ! |
| தேகமும் | எரியுது! |
| ஏகமும் | எரியுது! |
| நோகவோ | சாகவோ! |
| நிம்மதி | தரச்சொல்! |
| |
| கண்டேன் | அவரை! |
| உண்டேன் | அழகை! |
| கொண்டேன் | மையல்! |
| குலநலன் | இழந்தேன்! |
| பண்டுநாள்; | சிறுமிநான் |
| பழகிய | பாங்கினை |
| எண்ணிப் | பார்த்து |
| என்னிடம் | வரச்சொல்! |
| |
| காவியம் | படைத்திட |
| களிநடம் | பூத்திட |
| மேவிய | உணர்வால் |
| மெலிந்தேன் | உடலும்! |
| ஓவிய | மாயென் |
| உளம் | ஒளிர்பவரை! |
| ஆவிபோய் | சாகுமுன் |
| மேகமே | வரச்சொல்! |
| |
| தூவிய | மலர்விரி |
| துயில்கொளு | மஞ்சம் |
| தேவியென் | உடல்பட |
| சேர்வது | எந்நாள்? |
| நாவினில் | இன்சொல் |
| நவிலு | மேகமே! |
| பூவினில் | தேன்பெற |
| புசித்திட | வரச்சொல்! |
| |
| கண்” அவர் | எனக்கவர்! |
| காத்திட | வரச்சொல்! |
| பெண்” உயிர் | அவரிடம் |
| பேணிட | வரச்சொல் |
| மென்மை | மேனியை |
| மேவிட | வரச்சொல்! |
| தண்” குளிர் | மேகமே |
| தாங்கேன் | தூதுபோ! |
Back to Top