| இயம் பெண்ணுக்கும் வயோதிகனுக்கு நடந்த திருமணத்திற்குப் பின். முதலிரவில் | ||||
| அவன்: | பாதை | மாறிடு | கண்ணே | - வாழ்க்கைப் |
| பயணம் | தொடங்கும் | முன்னே! | ||
| மாதுனை | தொடுவதும் | இல்லை | - எந்தன் | |
| மனதிலும் | ஆசைகள் | இல்லை! | ||
| (பாதை | மாறிடு) | |||
| அவள்: | இளமை | இருப்பது | குறையோ | - நான் |
| ஏங்கித் | தவிப்பதும் | முறையோ! | ||
| அழகை | எனக்கேன் | தந்தனை | - இறைவா | |
| ஆயுள் | முழுதுமா | நிந்தனை! | ||
| அவன்: | இன்பம் | தருமே | இளமை | - அதை |
| ஏங்கித் | தவிக்குதே | முதுமை! | ||
| துன்பம் | வேண்டாம் | கண்ணே | - மாறிட | |
| துணிந்திடு | கைபடும் | முன்னே! | ||
| (பாதை | மாறிடு) | |||
| அவள்: | பாதை | மாறுமோ | உள்ளம் | - பெண்ணின் |
| பரம்பரைக் | கேயது | கள்ளம்! | ||
| அழகை | எனக்கேன் | தந்தனை | - இறைவா | |
| ஆயுள் | முழுதுமா | நிந்தனை! | ||
| கொதிக்குது | மீறுது | ஆசையே | - நான் | |
| கோடு | தாண்டினால் | வேசையே! | ||
| மிதிக்குதே | கடமை | கண்ணியம் | - இதை | |
| மீறுமோ | எனது | பெண்ணியம்! | ||
| (பாதை | மாறிடு) | |||
| அவன்: | இறைவன் | கொடுத்தான் | இளமை | - இதில் |
| இன்பம் | ஒன்றுதான் | தலைமை! | ||
| பழியென | நினைத்தால் | மடமை | - இதில் | |
| பாவம் | இல்லையிது | கடமை | ||
| ஓடிடும் | மானையும் | பிடித்தேன் | - அதை | |
| உற்றவ | ரிடம் | ஒப் | படைத்தேன்! | |
| நாடிய | செய்தேன் | அன்று | - எனக்கு | |
| நாடியும் | தளர்ந்தே | இன்று! | ||
| (பாதை | மாறிடு) | |||
| அவள்: | பாதை | மாறுமோ | உள்ளம் | - பெண்ணின் |
| பரம்பரைக் | கேயது | கள்ளம் | ||
| அழகை | எனக்கேன் | தந்தனை | - இறைவா | |
| ஆயுள் | முழுதுமா | நிந்தனை! | ||
