Skip to content
| | | | | |
| பெண்ணுக்கும் | ஆணுக்கும் | சமத்து | வந்தான் | |
| பேசுகிறோம் | இந்நாளில்; | ஆனால், | அந்நாள் | |
| பெண்ணிழிவு | பேசியுமே | அடிமை | யாக்கி | |
| பிழைகூறி | வழிமாறி | பழிகள் | தூற்றி | |
| பெண்ணைப்போய் | பேயென்றும் | மாயம் | செய்யும் | |
| பிசாசென்றும் | காட்டேரி | கூனி | என்றும் | |
| கண்ணெதிரே | வருகின்ற | உரிமை | போக்கி | |
| கடைக்கோடி | அடுப்படியில் | ஒதுக்கி | வைத்தார்! | |
| | | | |
| பெண்ணுக்கு | வீட்டிலேயும் | வெளியி | லேயும் | |
| பேசுவதற்கு | உரிமையிலை; | நாணம் | அச்சம் | |
| பெண்ணிற்கு | மட்டுமென | கதவுப் | பக்கம் | |
| போயொதுங்க; | உணர்வொடுங்க; | அடிமை | செய்தார் | |
| வண்ணமலர் | வான்நிலவு | உயிரோ | வியம் | |
| வடிவழகு | என்றேட்டில் | எழுதி | வைப்பார்! | |
| பெண்ணடக்கி | ஆண்டிடுவார்; | ஆண்மை | என்பார்! | |
| பேதமையால் | அழித்திட்டார்; | மடமை | காத்தார்! | |
| | | | |
| பெண்ணின்றி | ஆணுக்கு | இன்பம் | ஏது | |
| பிரசுகங்கள், | பிரசவங்கள் | எவரால் | கிட்டும் | |
| பெண்ணின்றி | ஆண்வர்க்கம் | தோன்றப் | போமோ | |
| பிள்ளைவளர்க் | கின்றபாசம் | யாரின் | பாசம்; | |
| பெண்வெறுக்கும் | ஜடாமுடிசேர் | முனிவர் | கூட | |
| பெண்துறவி | சீடர்துணை | கொண்ட | துண்டு | |
| கண்ணிரண்டு | ஆடவர்க்கு | உண்டு | என்றால் | |
| கண்ஒன்று | பெண்ணென்று | கண்டார் | இன்று | |
| | | | |
| வாளேந்தி | பரியேறி | போர்வென் | றாண்ட! | |
| வரலாறு | பெண்ணுக்கும் | உண்டு; | நல்ல | |
| கோலேந்தும் | வீரமங்கை | வேலு | நாச்சி | |
| குன்றிலுயர் | மங்கம்மா | ஜான்ஸி | உண்டு | |
| வேலேந்தி | ஆண்வர்க்கம் | அடிமை | கொண்ட | |
| ஆரவல்லி | சூரவல்லி | அமுத | வல்லி | |
| சூளேந்தி | ஆண்டதுவும் | உண்டு; | அந்த | |
| துடிப்புத்தான் | பெண்ணுரிமை | விடிவின் | உச்சம்! | |
| | | | |
| அடிமைப்பெண் | ணைச்சந்தைப் | பொருளாய் | விற்றார் | |
| ஆடுமா | டொப்ப | இழிநிலையில் | வைத்தார் | |
| கொடுமையிது | கொடுமையென | அண்ணல் | நபிதான் | |
| கொடுஞ்செயலின் | வேரறுத்தார் | வெற்றி | கண்டார் | |
| மிடிமையொடு | மடமையற | பெரியார் | காந்தி | |
| பாரதிபா | ரதிதாசன் | கலைஞர் | அண்ணா | |
| படித்தபகுத் | தறிவாளர் | திரண்டு | வெற்றிப் | |
| படிமுகத்தில் | பெண்ணுயர்த்தி | வைத்தார்; | வென்றார்! | |
| | | | |
| படிப்பதிலும் | நடிப்பதிலும் | விண்ணா | ராய்ந்து | |
| பறப்பதிலும் | பட்டங்கள் | சட்டம் | ஆளத் | |
| துடிப்பதிலும் | கல்விகேள்வி | வேலை | வாய்ப்பில் | |
| தொய்வின்றி | விழிப்போடு | விளையாட் | டினிலும் | |
| பிடிப்போடு | சமமாக | உயர்ந்தார் | பெண்கள், | |
| புதுப்புரட்சி | செய்கின்ற | காலம் | கண்டோம்! | |
| அடிப்படையில் | ஆண்பெண்கள் | சமமென் | றாச்சு! | |
| ஆர்ப்பரித்து | எழுந்ததுகாண்; | பெண்வி | ழிப்பு! | |
Back to Top