Skip to content
| மூடப் | பழக்கத்தை | மூடு | – வாழ்வின் |
| முன்னேற்ற | வழித்தடத்தை | நாடு! | |
| ஓடிப் | பொருள்புகழ் | தேடு | – அயரா |
| உழைப்புதான் | உயர்வென்று | பாடு! | |
| | | |
| எவரெவரும் | சமமென்று | ஆக்கு | – நாட்டில் |
| ஏழைபணக் | காரன்நிலை | நீக்கு! | |
| தவறாது | கல்விதொழில் | ஊக்கு | – ஆய்ந்து |
| தளிர்க்கட்டும் | இளைஞர்மனப் | போக்கு! | |
| | | |
| வளரவிடு | புதுமைகளைப் | பற்றி | – அது |
| வழிதிறந்தால் | உலகுபெறும் | வெற்றி! | |
| புலரட்டு | அறிவுலகம் | பெற்றி | – ஆங்கே |
| போய்மறையும் | பேதமைகள் | வற்றி! | |
| | | |
| பஞ்சமினி | யில்லெயெனச் | சொல்லு | – ஆன்ற |
| பகுத்தறிவால் | உலகத்தை | வெல்லு! | |
| துஞ்சுவதை | கெஞ்சுவதைக் | கொல்லு | – எதிலும் |
| துடிப்போடு | முன்னேறி | நில்லு! | |
| | | |
| நம்பிக்கை | கொண்டு | நீவாழு | – அறிவு |
| நன்மைதரும் | இன்பமெலாம் | சூழும்! | |
| தெம்புகொள் | உறுதியுனை | ஆளும் | – எட்டுத் |
| திசைமுழுதும் | புகழ்பரவி | நீளும்! | |
Back to Top