Skip to content
கண்ணில் | பதிவாகும் | மனத்தில் | உருவாகும் |
கனவின் | நிழலாகும் | எது | – ஒரு |
காந்த | இழுப்பாகி | நீந்தத் | தடுமாறி |
கலங்கி | நின்றிடுமே | அது! | |
| | | |
| | | |
பெற்ற | தாய்தந்தை | சுற்றம் | அறியாமல் |
மறைவில் | நடப்பது | எது | – மனத் |
திரையை | மூடிக்கொண்டு | ஓர | விழிநடத்தும் |
ஓரங்க | நாடகம் | அது! | |
| | | |
| | | |
பூத்த | அழகு;மணம் | காற்றில் | பரப்பமனம் |
ஏங்கித் | தவித்திருப்ப | தெது | – வரும் |
அச்சம் | நாணமெனும் | மிச்ச | உணர்களால் |
அடங்கிக் | கிடந்திடுமே | அது! | |
| | | |
| | | |
கொஞ்சி | மொழிபேசி | வஞ்சி | உறவாட |
அஞ்சி | நடக்கவரும் | எது | – அது |
அவனை | நினைந்தயிவள் | மனத்தில் | நிலைத்த அவன் |
உறவுக் | காதலென்ப | தது! | |
கள்ளிருக்கும் | உன்னிதழை | வண்ணமலரே – வண்டு |
கண்டுசுற்றி | வட்டமிட்ட | தென்னமலரே! |
உன்னழகைக் | கண்டுவண்டு | உள்ளேவந்தா&உன்னில் |
ஊறிவரும் | தேன்குடிக்க | ஓடிவந்ததா! |
| | |
| | |
காதலெனச் | சொல்லுகிறார் | என்னமலரே – கண்ணில் |
கண்டபெண்ணை | ரசிக்கிறார் | சொல்லுமலரே! |
பேதமின்றி | பலமலரில் | தேனீஅமரும்-அந்தப் |
பாதையிங்கே | சரிதானா | சொல்லுமலரே! |
| | |
| | |
வாடிவிட்ட | மலர்தேடித் | தேனீவருமா – அந்த |
வாசல்வழி | பறக்குமா | சொல்லுமலரே! |
கட்டுடலும் | கெட்டழகு | விட்டபின்னங்கே – காதல் |
மொட்டுவிட்டு | மலருமா | சொல்லுமலரே! |
| | |
| | |
காதலென்ன | பருவத்தின் | மயக்கமல்லவா – அது |
மாறிஉரு | மாறிவய | தேறிமீறினால் |
ஆசைபாசம் | அன்புநட்பு | காதலெலாமே – ஒரு |
கானலென்னும் | மாயையாவ | துண்மையல்லவா! |
| | |
| | |
அம்பிகாப | திஅமரா | வதிசலீமொடு-அந்த |
அனார்க்கலி | மஜ்னுலைலா | கண்டதுமென்ன |
காதலென்றார் | காதல்போயின் | சாதலேயென்றார் அந்த |
காதல் பாதை | யார் தொடர்ந்தார்; | கடந்த துண்டுமா? |
காமினி | கண்மணி | நாமினி | ஓரணி |
மாதுநீ | நீகனி | தா! | |
தேடிநீ | கூடுநீ | ஆடுநீ | பாடுநீ |
நாடிநீ | ஓடிநீ | வா! | |
| | | |
| | | |
காவிலே | கனியொடு | கனியிலே | சாரெடு |
தேனிலே | ஊறவிடு | தா! | |
பூவிலே | நிறமெடு | மின்னிலே | பொன்னெடு |
நாவிலே | தமிழெடு | தா! | |
| | | |
| | | |
சந்தனச் | சேரெடு | தன்தனம் | பூசிடு |
வெந்தனல் | போக்கிடு | வா! | |
முந்திபடு | தென்றலை | முந்தவிடு | தூதுவிடு |
அந்திபடு | முன்னமே | வா! | |
| | | |
| | | |
ஊட்டிகுளிர் | ஊட்டிவிடு | ஊடலினை | ஓட்டிவிடு |
வாட்டுதுயர் | நீக்கிவிடு | வா! | |
பாட்டுமிளிர் | ராகமாக | கூட்டுசதி | தாளமாக |
ஆட்டுவிக்க | முன்னெழுந்து | வா! | |
| | | |
| | | |
அன்பெனும் | துடுப்பெடு | ஆசைகடல் | கடந்திடு |
வெம்பிடாம | லென்னைநம்பி | வா! | |
தன்பொழில் | குமுதமே | அமுதமே | பைங்கிளி |
தயங்கிடாம | லென்னைத்தேடி | வா! | |
| | | |
| | | |
அச்சமென்னடி | நாணமென்னடி | அம்மாக்கண்ணு | – அடி |
மிச்சமென்னடி | மீதமென்னடி | சும்மா | சொல்லு |
ஆசைதீர | இன்பமுன்னால் | கொடுக்கமுடியுமா | – அட |
ஆறுபோல | ஊறுறதைத் | தடுக்க | முடியுமா. |
கையைக்காட்டி | கண்ணக்காட்டி | அழைக்கிறேபுள்ளே | – ஒரு |
காந்தமாகி | இரும்புஎன்னை | இழுக்குறே | உள்ளே |
வண்டுவந்தா | தேன்குடிக்கலாம் | பூதிறந்ததுகிடக்கு | - என் |
வாசல்வரும் | முழுஉரிமை | உனக்குத்தானே | இருக்கு |
கொண்டுவந்து | ஆணழகைக் | கொட்டித்தாரேன் | கண்ணே |
என்கோகிலமே | மரகதமே | சந்தேகம்ஏன் | பெண்ணே |
தைமாதம் | வருகுதுங்க | தாலிவாங்கிவாங்க | -இந்த |
தையல்உமக் | காகத்தானே | கழுத்தை | நீட்டுவேங்க |
செண்டுபோல | திரண்டஅழகு | மயக்குதடிஎன்னை | -அடி |
சித்திரமே | என்றென்றைக்கும் | சேர்ந்திருப்பேன் | உன்னை |
மா | தந்தது | கன்ன | மல்லவோ! |
மதி | தந்தது | முக | மல்லவோ! |
பூ | தந்தது | நிற | மல்லவோ! |
புதுமை | தந்தது | இளமை | யல்லவோ! |
| | | |
| | | |
மின்னல் | தந்தது | பார்வை | யல்லவோ! |
மேகம் | தந்தது | கூந்த | லல்லவோ! |
கன்னல் | தந்தது | பேச்சு | அல்லவோ! |
கருணை | தந்தது | இறைவ | னல்லவோ! |
| | | |
| | | |
உதடு | தந்தது | ஊர்வசி | யல்லோ |
தனம் | தந்தது | மேனகை | யல்லோ |
நகை | தந்தது | ரம்பை | யல்லவோ |
நளினம் | தந்தது | திலோத்தமை | யல்லோ |
| | | |
| | | |
நீலம் | தந்தது | கண்க | ளல்லவோ! |
நெருப்பு | தந்தது | கற்பு | அல்லவோ! |
ஆசை | தந்தது | உறவு | அல்லவோ! |
அன்பு | தந்தது | பாச | மல்லவோ! |
| | | |
| | | |
அச்சம் | தந்தது | அடக்க | மல்லவோ! |
நாணம் | தந்தது | பெண்மை | யல்லவோ! |
மடம் | தந்தது | மரபு | அல்லவோ! |
பயிர்ப்பு | தந்தது | பண்பு | அல்லவோ! |
பெண்:- | காவியத் | தலைவா! | கவிதர | வாவா |
| காதல் | பூத்தது | வாவா | – என்னை |
| தாவி | அணைத்துத் | தளிருடல் | தழுவி |
| ஓவியம் | எழுதிட | வாவா | – உனையென் |
| உயிரில் | கலந்திட | வாவா! | |
ஆண்:- | தங்கச் | சிலையே | தளிர்முக | நிலவே |
| பொங்கும் | அமுதே | வாவா | – அழகு |
| பூக்கும் | கண்விழி | புகுந்து | என்னைத் |
| தாக்கும் | கணையே | வாவா | – தேன்குடம் |
| தந்திடு | வந்திடு | வாவா! | |
பெண்:- | வாளும் | வேலும் | ஆளும் | திறமே |
| வீரமே | வெற்றியே | வாவா | – ஆசை |
| சூழும் | மன்மத | சுகம்தர | வாவா |
| சொர்க்கம் | பகிர்ந்திட | வாவா | – இதயம் |
| வாங்கிடத் | தாங்கிவிட | வாவா! | |
ஆண்:- | குமுதமே | மலரே | அமுதக் | கலசமே |
| குங்குமப் | பூவே | வாவா | – வளஞ்சேர் |
| செம்மொழித் | தமிழின் | தேன்சுவை | நீயே |
| சிரிக்கும் | முல்லையே | வாவா | – மனதுள் |
| பறக்கும் | கிள்ளையே | வாவா! | |
பெண்:- | கோபுர | கலசமே | குறையிலாத் | தேரே |
| குன்றினில் | ஒளிதரும் | விளக்கே | – சுக |
| மன்மதக் | கணையே | ரதியெனக் | கிணையே |
| பெண்மனம் | சிலிர்க்குது | வாவா | – காதல் |
| போதை | மீறுதே | வாவா! | |
ஆண்:- | ஆற்றை | அடக்கும் | கடலே | வருகிறேன் |
| அன்பை | அடக்கும் | உயிரே | வருகிறேன் |
| போற்றும் | பெண்மைப் | புதுமையே | வருகிறேன் |
| பெருமை | தரவரும் | உறவே | வருகிறேன் |
| ஏற்றது | தருகிறேன் | இன்றே | வருகிறேன் |
தோழி:- | கன்னம் | சிவந்தது | ஏனடியோ | – அதில் |
| கதை | படித்தது | யாரடியோ! | |
| முன்னம் | நடந்தது | என்னடியோ | – அதை |
| மூடி | மறைப்பதேன் | சொல்லடியோ! | |
அவள்:- | கண்ணிலே | நெஞ்சிலே | வாழ்பவரை | – நான் |
| காட்ட | முடியுமோ | சொல்லடியோ! | |
| என்னிலே | ஒன்றாய்ச் | சேர்ந்தவரை | – நான் |
| எப்படிச் | சொல்லுவேன் | கூறடியோ! | |
தோழி:- | நாணம் | கூச்சம் | போனதெங்கே | – அந்த |
| நாயகன் | செய்ததும் | எது | அங்கே |
| பாணம் | மன்மதன் | போட்டதெப்போ | – நாங்கள் |
| பார்க்க | வில்லையே | ஏதுதப்போ! | |
அவள்:- | தப்பு | தாளம் | ஏதுமில்லை | – இதில் |
| சந்திரம் | மந்திரம் | தூதுமில்லை! | |
| ஒப்பிய | அத்தானை | எண்ணியெண்ணி | – மெத்தை |
| உரசக் | கன்னம் | சிவந்ததடி! | |
தோழி:- | தந்தை | தாயை | மறந்தனையோ | – உந்தன் |
| தனயன் | தங்கை | அறிந்திலையோ! | |
| சிந்தை | தடுமாறி | கனவில் | கள்வனை |
அவள்:- | உருவம் | தந்ததும் | உணர்வு | தந்ததும் |
| பருவம் | தந்ததும் | இறைவனடி! | |
| உன்னையும் | அண்ணன் | அப்பா | அம்மா |
| உற்றார் | கேட்டா | காதல்வரும்! | |
“பூ”வெடுத்து | நீவரவோ! | பொன்னெடுத்து | நான்தரவோ! |
“பா”வெடுத்து | நீவரவோ! | பண்ணெடுத்து | நான்தரவோ! |
“நா”வெடுத்து | நீவரவோ! | நல்லதமிழ் | நான்தரவோ! |
தேனெடுத்து | நீவரவோ! | தீருமட்டும் | நான்பெறவோ! |
| | | |
| | | |
வில்லெடுத்து | புருவத்தால் | விழியம்பை | வீசுறியே! |
மல்லெடுக்கத் | தயங்காத | மார்பகத்தால் | மயக்குறியே! |
கல்லெடுத்து | அடிப்பதுபோல் | கண்ணடித்துப் | போடுறியே! |
சொல்லிருக்கு; | பேச்சு;இல்லை | சொக்குதடி | என்மனசு! |
| | | |
| | | |
பேருக்கு | நீயாரோ! | பிறருக்கு | நான்யாரோ! |
ஊருக்குத் | தெரியாது; | உன்உறவு! | என்உறவு! |
சீரிருக்கு | நம்உறவில்; | சிறப்பிருக்கு | யார்அறிவார்! |
நேருக்கு | நேர்சேர்வோம்; | நெருக்கமாய் | வாகண்ணே! |
| | | |
| | | |
கோவைக்கனி | தின்னுதற்குக் | கொத்தும்கிளி | நான் வாரேன்! |
பாவையே | கன்னத்தைப் | பத்திரமாய் | வைத்திடடீ! |
தேவையை | நிறைவேற்றத் | தேடிவாரேன் | உன்னிடத்தில்! |
தீர்வைநீ | தரவேண்டும் | சிந்தாமல் | சிதறாமல்! |
| | | |
| | | |
கொஞ்சுமொழி | அஞ்சுகமே | கோமளமே! | ரஞ்சிதமே! |
வஞ்சிமல | ரேயெனக்கு | வாழ்வுதர | வருபவளே! |
நெஞ்சில்எனைச் | சேர்த்தவளே! | நீக்கமற | ஏற்றவளே! |
செஞ்செடுத்த | சிலைவடிவே! | செந்தமிழே! | வாகண்ணே! |
| | | |
| | | |
காரிருக்கும் | நாள்வரைக்கும் | கடலிருக்கும் | நாள்வரைக்கும் |
சூரியசந் | திரரெல்லாம் | சுழன்றிருக்கும் | நாள்வரைக்கும் |
ஊரிருக்கும் | நாள்வரைக்கும் | உறவிருக்கும் | நாள்வரைக்கும் |
பாரிருக்கும் | நாள்வரைக்கும் | பாகாலம் | வாழ்ந்திருப்போம்! |
அவன்:- | செக்கச் | சிவந்த | நிற | மிருக்கு! | |
| சிரிப்பில் | ஆயிரம் | கதை | இருக்கு! | |
| முக்கனிச் | சாறாய்ச் | பேச்சி | ருக்கு! | |
| முழுநில | வாக | முகமி | ருக்கு! | |
| | | | | |
அவள்:- | சிங்கம் | தந்தது | நடை | யழகு! | |
| செந்தமிழ் | தந்தது | சொல்ல | ழகு! | |
| தங்கம் | தந்தது | குணத்த | ழகு! | |
| தந்தம் | தந்தது | உடல | ழகு! | |
| | | | | |
அவன்:- | மயிலும் | தோற்குமுன் | ஆட்டத் | திலே! | |
| மானும் | தோற்குமுன் | சாய | லிலே! | |
| குயிலும் | தோற்குமுன் | குரலி | னிலே! | |
| குங்குமம் | தோற்குமுன் | உதட்டி | னிலே! | |
| | | | | |
அவள்:- | படையும் | தோற்குமுன் | நடையி | னிலே! | |
| பழமை | தோற்குமுன் | உடையி | னிலே! | |
| விடிந்தே | தெரியும் | திறமை | யெலாம்! | |
| விடையினைக் | கூறும் | இளமை | யெலாம்! | |
| | | | | |
அவன்:- | காதல் | வந்தால் | அன்பு | வரும்! | |
| அன்பு | வந்தால் | ஆசை | வரும்! | |
| ஆசை | வந்தால் | பாசம் | வரும்! | |
| பாசம் | வந்தால் | பழக | வரும்! | |
| | | | | |
அவள்:- | எட்ட | இருந்தால் | மோகம் | வரும்! | |
| இணைபிரிந் | தாலோ | தாகம் | வரும்! | |
| கிட்ட | இருந்தால் | உறவு | வரும்! | |
| கிடைத்திட | அரிய | இன்பம் | வரும்! | |
கண்ணுறக்கம் | போச்சுதடி | கள்ளியே | – உன்னைக் |
காணத்தினம் | துடிக்கிறேனே | துள்ளியே! | |
காத்திருக்கச் | சொன்னாயே | கன்னியே | – நீஏன் |
கண்டுகொள்ள | வில்லையடி | என்னையே! | |
| | | |
ஆத்தங்கரை | தோப்பினிலே | கிள்ளையே | – உன்னை |
அணைத்திடவே | ஏங்குறேனே | முல்லையே! | |
பார்த்தவிழி | பூத்ததடி | வள்ளியே | – என்னைப் |
பார்த்தமலர் | சிரிக்குதடி | எள்ளியே! | |
| | | |
ஜோடிப்புறா | கிளைதனிலே | கொஞ்சுது | – மான்கள் |
சேர்ந்திணைந்து | புறாயினத்தை | மிஞ்சுது! | |
நாடிமலர் | தேடிவண்டு | உண்ணுது | – உன்னை |
நான்நினைத்தேன் | | மனதென்னவோ | பண்ணுது |
| | | |
காமனுக்கும் | எனக்குமில்லை | வம்பு | – ஏனோ |
கனைதொடுத்து | வீசுறானே | அம்பு! | |
மாமனென்மேல் | உனக்கிலையோ | அன்பு | – தனியே |
வாடுகிறேன்; | நீதருவாய் | தெம்பு! | |
| | | |
குயிலும்தன் | துணையெண்ணிப் | பாடும் | – அந்தக் |
குரல்கேட்டுப் | பெண்குயிலும் | நாடும்! | |
மயில்கடை | மேகத்திற் | காடும் | – எனது |
மனமோநீ | வரும்பாதை | தேடும்! | |
| | | |
பிடிவாதம் | விட்டுவா | இங்கே | - உன்னைப் |
பார்க்காமல் | வாழ்வதுநான் | எங்கே! | |
வடிவழகே | தேடுகிறேன் | எங்கும் | – நீயும் |
வந்தால்தான் | என்னுயிரும் | தங்கும் | |
Back to Top