வண்ணமலர் | பூத்திருக்கு | வண்டுவந்து | காத்திருக்கு | |
என்னவளே | தேனெடுத்து | இன்பம்தரவா | -கண்ணே | |
கன்னமுத | வாயிதழில் | கள்குடிக்கவா! | ||
நேத்துஎன்னைப் | பார்த்துவிட்டு | நிற்காமே | போனியேடி | |
காத்துநிற்க | விடுவதுதான் | காதலொக்குமா | -கண்ணே | |
காரணத்தைக் | கூறடியோ | கண்ணுப்பக்கமா! | ||
அன்னத்திடம் | சொன்னதென்ன | ஆருக்குநீ | தூதுவிட்டே | |
என்னக்கிட்ட | வரவில்லையே | என்னகதையோ | -கண்ணே | |
ஏக்கம் | என்னைத்தாக்குதடி | வண்ணக்கிளியே! | ||
ஏபுள்ளே | தூக்குனேனே | இளவட்டக் | கல்லுரெண்டு | |
காளையை | அடக்குனேனே | காணவில்லையா | – உன்னைக் | |
கட்டிக்கொள்ள | என்னசெய்ய | கூறடிபெண்ணே! | ||
கம்புச்சண்டை | கத்திச்சண்டை | குத்துச்சண்டை | மல்லுக்கட்டு | |
சேவச்சண்டை | கடாச்சண்டை | ஜெயிக்கட்டுமா | – இல்லை | |
ஆடுபுலி | வேடமிட்டு | ஆடட்டுமா! | ||
வானவில்லைக் | கயிறாக்கி | சந்திரனை | சூரியனை | |
நட்சத்திரக் | கூட்டத்தைக் | கட்டிவரவா | -இல்லை | |
வானுலகக் | காமதேனைக் | கூட்டிவரவா ! | ||
தேன்எடுத்துத் | தேன்தரவா | தேவையென்ன | கூறடியோ | |
காமனுக்கு | ரதிபோல | வந்துசேரடி | – இந்த | |
மாமனின்னும் | எத்தனைநாள் | காத்திருப்பேன்டி ! |
Category: இல்லறம்
இல்லறம்
இன்பசுகப் பெட்டகமே
கட்டிதந்த | கனுக்கரும்பே! | கயல்துள்ளும் | மைவிழியே! |
கொட்டிவைத்த | முத்தழகே! | குலமகளே! | கனிமொழியே! |
எட்டியிருந் | தென்மனதில் | இனிக்கின்ற | நல்லமுதே! |
அட்டியில்லை | காந்தமென | சுற்றிடுவா | சீரழகே! |
வான்நிலவு | உன்அக்காள்! | வண்மையில் | உன்தங்கை! |
தேனுனக்குத் | தோழியடி! | தென்றலுனக் | கப்படித்தான்! |
பூக்கூட்டம் | விண்மீன்உன் | பணிப்பெண்க | ளாகுமடி! |
பேரழகே | இன்பசுகப் | பெட்டகமே | வாராயோ! |
வெண்பாவின் | நடைதுள்ள | என்பாவாய் | நீ |
பெண்பாவாய் | என்னுளத்தைப் | பெரும்பாலை | யாக்கிடாதே! |
கண்பார்ப்பாய் | கண்மணியே! | களிசேர்ப்பாய் | என்வாழ்வில் |
உன்பார்வை | என்பார்வை | ஒன்றாக்கு | மான்மகளே! |
கோடியொரு | பூமலரும் | கோகிலக்கண் | நீதிறந்தால்! |
ஆடிவரும் | அன்னம்தேர் | அசைபோடும் | உன்நடையில்! |
பாடிவரும் | பூங்குயிலும் | பனிக்குளிரும் | உன்மொழியில்! |
கூடிவர | வாழ்வுதரக் | கோதையேநீ | வந்துவிடு! |
பூதளத்துப் | பொன்தனமே! | பூத்திருக்கும் | தாமரையே! |
மாதரசி | மாணிக்க | மணிக்குலத்து | வாழ்வரசி! |
தீதறியாத் | தென்தமிழே! | திராவிடத்துப் | பெரும்புகழே! |
ஏதுமறி | யாயென்னை | ஏங்கவிடா | தேதேவி |
முக்கனியின் | சாற்றைப்போல் | முத்தமிழின் | ஊற்றைப்போல் |
எக்காலும் | வாழ்ந்திருப்போம் | ஏந்திழையே | வந்துவிடு |
திக்கெல்லாம் | ஒளிகூட்டும் | தினகரனைச் | சாட்சிவைப்போம் |
தக்கவைப்பாய் | என்னுயிரை | தந்துவிடு! | வந்துவிடு! |
கிணற்று நீருநான் உனக்கு
ஆண்:- | அத்தை | மகளே! | சித்திரப் | பெண்ணே! |
அழகே! | மயிலே! | வாவா! | ||
அக்கம் | வரவா! | முத்தம் | தரவா! | |
வெக்கம் | ஏனடி | மானே! | ||
பெண்:- | மொட்டு | மல்லிகை | மணக்கும் | – உந்தன் |
மோகமென் | மனதைத் | தகர்க்கும்! | ||
கட்டுக் | குலையா | மேனி | இருக்கு | |
கட்டி | அணைத்திட | வாவா! | ||
ஆண்:- | அணைப்பிலே | சுகத்தைத் | தரவா | – உன்னை |
அமுதக் | கடலிலே | விடவா! | ||
உனக்கும் | எனக்கும் | உறவு | – தருமே | |
ஒவ்வொரு | நாள்வரும் | இரவும் | ||
பெண்:- | கிணற்று | நீருநான் | உனக்கு | – இதில் |
கேட்கத் | தோனுமோ | கணக்கு | ||
திகட்டும் | வரைக்கும் | இன்பம் | – அதையே | |
எடுத்திடு | கொடுத்திடு | வாவா! | ||
ஆண்:- | தங்கத் | தாலியுடன் | வரவா | – என்னைத் |
தாரை | வார்த்துத் | தரவா! | ||
கோவைக் | கனியே! | குங்குமச் | சிமிழே! | |
பாவை | விளக்கே! | வாவா! | ||
இருவரும்:- | ஒன்று | சேருவோம் | தோதா | – இதை |
உலகம் | வெறுக்குமோ | தீதா! | ||
வாழ்ந்து | காட்டுவோம் | வாவா! | -வாழ்வில் | |
வெற்றி | நாட்டுவோம் | வாவா! |
இருவரும்:- ஒன்று சேருவோம் தோதா – இதை – உலகம் வெறுக்குமோ தீதா! வாழ்ந்து காட்டுவோம் வாவா! வாழ்வில் – வெற்றி நாட்டுவோம் வாவா
உலகம் தெரியலே
என்னத்தைநான் சொல்லப்போறேன் அத்தானே – மனசு எதைநெனச்சோ குழம்பிப்போயி பித்தானேன். | |||
கண்ணு | திறந்து | பார்த்து | இருக்குது |
ஒன்னும் | தெரியலே – | இரண்டு | |
காது | கூட | நல்லா | இருக்கு |
ஒன்னும் | கேக்கலே! | ||
உடலு | மட்டு | இங்கே | இருக்கு |
உணர்வு | தெரியலே – | எந்த | |
உறவும் | துறவும் | புரிய | வில்லை |
ஒன்னும் | சரியில்லை! | ||
பூவை | எடுத்து | முகர்ந்து | பார்த்தேன் |
மணக்கவே | இல்லை – | வீட்டுப் | |
பூஜை | அறையில் | வணங்கிப் | பார்த்தேன் |
மனசு | தெளியலே! | ||
சேலை | இடுப்பில் | சுற்றிப் | பார்த்தேன் |
சொருக | முடியலே – | இங்கே | |
சொந்தம் | பந்தம் | இருக்கு | றாங்க |
நினைப்பிலே | இல்லே! | ||
வயலில் | நெல்லு | விளைஞ்சு | கிடக்கு |
அறுக்க | முடியலே – | அதைக் | |
கட்டுக் | கட்டி | களத்து | மேட்டுலே |
சேர்க்க | முடியலே | ||
கதிரை | அடிச்சு | நெல்லு | மூட்டை |
கட்ட | முடியலே – | அதைக் | |
கவனத் | தோடு | வீடு | கொண்டு |
சேர்க்க | முடியலே | ||
மயக்க | முன்னு | சொல்லு | வாங்க |
அதுவா | இருக்குமா – | இல்லை | |
மாய | வேலை | சித்து | வேலை |
இதுவா | இருக்குமா! | ||
காத | லுன்னு | சொல்லு | வாங்க |
அதுவா | இருக்குமா – | இந்தக் | |
கதை | எனக்குப் | புரிய | லையே |
சொல்லு | அத்தானே! | ||
உன்னை | நினைச்சேன் | உன்னை | நினைச்சேன் |
உறக்கமே | இல்லை – | உங்க | |
ஒருத்த | ரையே | நினைச்ச | தாலே |
உலகம் | தெரியலே! | ||
கண்ணை | மூடி | இருந்தா | லுங்கள் |
உருவம் | தெரியுதே – | தென்றல் | |
காற்றைத் | தூது | அனுப்பு | றேன்நான் |
வாங்க | அத்தானே! | ||
தைய | லென்னைத் | தேடி | வாங்க |
தைபொ | றக்குது – | எனக்கு | |
தாலி | கட்டி | மாலை | சூட்டி |
மனசைத் | தேத்துங்க. |
கண்டதும் காதல்
பூவாடை | எனைமயக்கத் | திரும்பிப் | பார்த்தேன் | |
பொன்னோடை | எழில்மேனி | பொலிவு | கூட்டும் | |
பாவடை | தாவணியின் | பருவ | மங்கை | |
பார்வையிலே | சுருக்கிட்டு | எனையி | ழுத்தாள்! | |
மாவாட்டும் | கற்குழவி | யாகி | எந்தன் | |
மனஞ்சுழல | உணர்வுந்த | ஆர்வத் | தாலே | |
நாவாட | நான்துணிந்தேன்; | அவளோ | மெல்ல | |
நடைபெயர்ந்தாள்; | நான்தொடர்ந்தேன்; | கடலோ | பக்கம் | |
பார்வையிலே | எனையிழந்தேன்; | கன்ன | லாளின் | |
பசப்பினிலே | நினைவிழந்தேன்; | கொவ்வைச் | செந்தேன் | |
கோர்வையிதழ்ச் | சிவப்பினிலே | செயலி | ழந்தேன் | |
குலைக்கனியாம் | கன்னத்தை | மார்பைக் | கண்டு | |
ஊர்வெளியைச் | சூழ்நிலையை | மறந்தே | போனேன்! | |
உளறுமொழி | கிறுக்கனைப்போல் | புலம்ப | லானேன்! | |
கூர்விழியாள் | கடற்கரையை | அடைந்த | போது | |
குமுறுமுணர் | வோடங்கு | நானும் | சேர்ந்தேன்! | |
நான்பார்த்தேன்; | மான்பார்த்துத் | திரும்பிக் | கொண்டாள்! | |
நான்பார்க்காப் | பாவனையில் | திரும்பும் | போது | |
மான்பார்த்தாள்; | நேர்க்கோட்டில் | விழிகள் | சேர | |
மணிபார்த்தேன் | இரவெட்டு; | நிலவோ | நல்ல | |
தேன்வார்த்து | ஒளிகொட்டும்; | அலைகள் | தாவும் | |
திசைஎங்கும் | இன்பமோ | இன்பம் | என்றே | |
தானார்த்துக் | காதலர்கள் | இளமை | வேகம் | |
தணித்திருந்தார்; | நாங்களங்கே | தனித்தி | ருந்தோம் |
பெண் விழிப்பு
பெண்ணுக்கும் | ஆணுக்கும் | சமத்து | வந்தான் | |
பேசுகிறோம் | இந்நாளில்; | ஆனால், | அந்நாள் | |
பெண்ணிழிவு | பேசியுமே | அடிமை | யாக்கி | |
பிழைகூறி | வழிமாறி | பழிகள் | தூற்றி | |
பெண்ணைப்போய் | பேயென்றும் | மாயம் | செய்யும் | |
பிசாசென்றும் | காட்டேரி | கூனி | என்றும் | |
கண்ணெதிரே | வருகின்ற | உரிமை | போக்கி | |
கடைக்கோடி | அடுப்படியில் | ஒதுக்கி | வைத்தார்! | |
பெண்ணுக்கு | வீட்டிலேயும் | வெளியி | லேயும் | |
பேசுவதற்கு | உரிமையிலை; | நாணம் | அச்சம் | |
பெண்ணிற்கு | மட்டுமென | கதவுப் | பக்கம் | |
போயொதுங்க; | உணர்வொடுங்க; | அடிமை | செய்தார் | |
வண்ணமலர் | வான்நிலவு | உயிரோ | வியம் | |
வடிவழகு | என்றேட்டில் | எழுதி | வைப்பார்! | |
பெண்ணடக்கி | ஆண்டிடுவார்; | ஆண்மை | என்பார்! | |
பேதமையால் | அழித்திட்டார்; | மடமை | காத்தார்! | |
பெண்ணின்றி | ஆணுக்கு | இன்பம் | ஏது | |
பிரசுகங்கள், | பிரசவங்கள் | எவரால் | கிட்டும் | |
பெண்ணின்றி | ஆண்வர்க்கம் | தோன்றப் | போமோ | |
பிள்ளைவளர்க் | கின்றபாசம் | யாரின் | பாசம்; | |
பெண்வெறுக்கும் | ஜடாமுடிசேர் | முனிவர் | கூட | |
பெண்துறவி | சீடர்துணை | கொண்ட | துண்டு | |
கண்ணிரண்டு | ஆடவர்க்கு | உண்டு | என்றால் | |
கண்ஒன்று | பெண்ணென்று | கண்டார் | இன்று | |
வாளேந்தி | பரியேறி | போர்வென் | றாண்ட! | |
வரலாறு | பெண்ணுக்கும் | உண்டு; | நல்ல | |
கோலேந்தும் | வீரமங்கை | வேலு | நாச்சி | |
குன்றிலுயர் | மங்கம்மா | ஜான்ஸி | உண்டு | |
வேலேந்தி | ஆண்வர்க்கம் | அடிமை | கொண்ட | |
ஆரவல்லி | சூரவல்லி | அமுத | வல்லி | |
சூளேந்தி | ஆண்டதுவும் | உண்டு; | அந்த | |
துடிப்புத்தான் | பெண்ணுரிமை | விடிவின் | உச்சம்! | |
அடிமைப்பெண் | ணைச்சந்தைப் | பொருளாய் | விற்றார் | |
ஆடுமா | டொப்ப | இழிநிலையில் | வைத்தார் | |
கொடுமையிது | கொடுமையென | அண்ணல் | நபிதான் | |
கொடுஞ்செயலின் | வேரறுத்தார் | வெற்றி | கண்டார் | |
மிடிமையொடு | மடமையற | பெரியார் | காந்தி | |
பாரதிபா | ரதிதாசன் | கலைஞர் | அண்ணா | |
படித்தபகுத் | தறிவாளர் | திரண்டு | வெற்றிப் | |
படிமுகத்தில் | பெண்ணுயர்த்தி | வைத்தார்; | வென்றார்! | |
படிப்பதிலும் | நடிப்பதிலும் | விண்ணா | ராய்ந்து | |
பறப்பதிலும் | பட்டங்கள் | சட்டம் | ஆளத் | |
துடிப்பதிலும் | கல்விகேள்வி | வேலை | வாய்ப்பில் | |
தொய்வின்றி | விழிப்போடு | விளையாட் | டினிலும் | |
பிடிப்போடு | சமமாக | உயர்ந்தார் | பெண்கள், | |
புதுப்புரட்சி | செய்கின்ற | காலம் | கண்டோம்! | |
அடிப்படையில் | ஆண்பெண்கள் | சமமென் | றாச்சு! | |
ஆர்ப்பரித்து | எழுந்ததுகாண்; | பெண்வி | ழிப்பு! |
வண்ணக்கிளியே!
மூழ்கிமூழ்கி | முத்தெடுத்து |
முதிர்ந்தமுத்தைத் | தேர்ந்தெடுத்து |
முத்துப்பல்லுக் | காரி உனக்கு |
அள்ளித்தருவேன் – | உன்னை |
முத்துப்பல்லாக் | கேற்றிவைத்துச் |
சுற்றி | வருவேன்! |
கட்டுக்கட்டா | கரும்பெடுத்து |
கணுக்கணுவா | வெட்டியதில் |
நடுக்கரும்பை | நானெடுத்து |
உனக்குத் | தருவேன் – என் |
நாடிநரம்பில் | நீமட்டும்தான் |
நல்லாப் | பாரடி! |
மொட்டுமொட்டா | அரும்பெடுத்து |
முல்லைமலர் | சரந்தொடுத்து |
கட்டுக்குழல் | சூட்டுவேன்நான் |
கண்ணே | கற்கண்டே– உன் |
கழுத்தில்தாலி | கட்டுவேன்நான் |
பெண்ணே | பூச்செண்டே! |
மாடுமனை | தோட்டமிருக்கு |
மஞ்சள்கடலை | கரும்புக்காட்டில் |
பஞ்சடியைப் | பதிக்கவாடி |
பச்சைக்கிளியே – | எனக்குப் |
பாலும்தேனும் | அழுதும்தாடி |
இச்சைக் | கிளியே! |
தட்டித்தட்டி | தங்கத்திலே |
தட்டுப்பாடு | இல்லாமலே |
தட்டான்தந்தான் | நகைவகைகள் |
தங்கரெத்தினமே – | உனக்கு |
தாலிகூட | செய்துவிட்டேன் |
பொண்ணு | ரெத்தினமே |
பட்டுப்பட்டா | காஞ்சிப்பட்டு |
பலகடையிலே | தேடிஉனக்குக் |
கட்டுக்கட்டா | சேலைவாங்கிக் |
காத்திருக்கேன்டீ – | என்னை |
காக்கவைக்க | லாகுமோஎதிர் |
பார்த்திருக் | கேன்டீ! |
சுத்திச்சுத்தி | திலோத்தமைகள் |
ஊர்வசிகள் | மேனகைகள் |
மோகினிகள் | மயக்குறாங்க |
அன்னக் | கிளியே – என்னை |
அடைந்துசுகம் | தந்திடடீ |
வண்ணக் | கிளியே! |
தைதையின்னு | தைவருது |
தாளமேளம் | நாதஸ்வரம் |
வைத்துனக்கு | மாலையிடுவேன் |
வண்ணவண்ணமா – | ஊரார் |
வாழ்த்துவார்கள் | நீயும்நானும் |
வாழ்வோம் | திண்ணமா! |
மேகமே தூது போ
மேகமே | “வா” என் |
வேதனை | கேளு! |
மோகமோ | “தீ” ப்போல் |
மூள்வதைப் | பாரு! |
தாகமோ | மீறுது! |
தனிமை | தகிக்கிது! |
சோகமே | சூழுது! |
சொல்அவ | ரிடத்தில்! |
பொங்குது | ஆசை! |
புழுங்குது | உள்ளம்! |
திங்குது | வேட்கை! |
திகைக்குது | மனது! |
எங்கிருப் | பாரோ |
என்னுயிர் | அவரிடம்! |
தங்கிடத் | தாங்கிடத் |
தயக்கமேன் | வரச்சொல்! |
பறந்து | திரிகிறாய்! |
பலஊர் | அலைகிறாய்! |
மறந்தி | டாதே |
மதிதவழ் | முகிலே! |
பிறந்தேன் | அவர்க்கென |
பிரிய | முடியுமோ! |
இறந்து | படுமுன் |
என்னிடம் | வரச்சொல்! |
தாகமோ | விரகமோ! |
தாக்கிடும் | புயலோ! |
வேகமோ | நாகமோ! |
வில்விடு | வினையோ! |
தேகமும் | எரியுது! |
ஏகமும் | எரியுது! |
நோகவோ | சாகவோ! |
நிம்மதி | தரச்சொல்! |
கண்டேன் | அவரை! |
உண்டேன் | அழகை! |
கொண்டேன் | மையல்! |
குலநலன் | இழந்தேன்! |
பண்டுநாள்; | சிறுமிநான் |
பழகிய | பாங்கினை |
எண்ணிப் | பார்த்து |
என்னிடம் | வரச்சொல்! |
காவியம் | படைத்திட |
களிநடம் | பூத்திட |
மேவிய | உணர்வால் |
மெலிந்தேன் | உடலும்! |
ஓவிய | மாயென் |
உளம் | ஒளிர்பவரை! |
ஆவிபோய் | சாகுமுன் |
மேகமே | வரச்சொல்! |
தூவிய | மலர்விரி |
துயில்கொளு | மஞ்சம் |
தேவியென் | உடல்பட |
சேர்வது | எந்நாள்? |
நாவினில் | இன்சொல் |
நவிலு | மேகமே! |
பூவினில் | தேன்பெற |
புசித்திட | வரச்சொல்! |
கண்” அவர் | எனக்கவர்! |
காத்திட | வரச்சொல்! |
பெண்” உயிர் | அவரிடம் |
பேணிட | வரச்சொல் |
மென்மை | மேனியை |
மேவிட | வரச்சொல்! |
தண்” குளிர் | மேகமே |
தாங்கேன் | தூதுபோ! |
பாதை மாறிடு கண்ணே
இயம் பெண்ணுக்கும் வயோதிகனுக்கு நடந்த திருமணத்திற்குப் பின். முதலிரவில் | ||||
அவன்: | பாதை | மாறிடு | கண்ணே | - வாழ்க்கைப் |
பயணம் | தொடங்கும் | முன்னே! | ||
மாதுனை | தொடுவதும் | இல்லை | - எந்தன் | |
மனதிலும் | ஆசைகள் | இல்லை! | ||
(பாதை | மாறிடு) | |||
அவள்: | இளமை | இருப்பது | குறையோ | - நான் |
ஏங்கித் | தவிப்பதும் | முறையோ! | ||
அழகை | எனக்கேன் | தந்தனை | - இறைவா | |
ஆயுள் | முழுதுமா | நிந்தனை! | ||
அவன்: | இன்பம் | தருமே | இளமை | - அதை |
ஏங்கித் | தவிக்குதே | முதுமை! | ||
துன்பம் | வேண்டாம் | கண்ணே | - மாறிட | |
துணிந்திடு | கைபடும் | முன்னே! | ||
(பாதை | மாறிடு) | |||
அவள்: | பாதை | மாறுமோ | உள்ளம் | - பெண்ணின் |
பரம்பரைக் | கேயது | கள்ளம்! | ||
அழகை | எனக்கேன் | தந்தனை | - இறைவா | |
ஆயுள் | முழுதுமா | நிந்தனை! | ||
கொதிக்குது | மீறுது | ஆசையே | - நான் | |
கோடு | தாண்டினால் | வேசையே! | ||
மிதிக்குதே | கடமை | கண்ணியம் | - இதை | |
மீறுமோ | எனது | பெண்ணியம்! | ||
(பாதை | மாறிடு) | |||
அவன்: | இறைவன் | கொடுத்தான் | இளமை | - இதில் |
இன்பம் | ஒன்றுதான் | தலைமை! | ||
பழியென | நினைத்தால் | மடமை | - இதில் | |
பாவம் | இல்லையிது | கடமை | ||
ஓடிடும் | மானையும் | பிடித்தேன் | - அதை | |
உற்றவ | ரிடம் | ஒப் | படைத்தேன்! | |
நாடிய | செய்தேன் | அன்று | - எனக்கு | |
நாடியும் | தளர்ந்தே | இன்று! | ||
(பாதை | மாறிடு) | |||
அவள்: | பாதை | மாறுமோ | உள்ளம் | - பெண்ணின் |
பரம்பரைக் | கேயது | கள்ளம் | ||
அழகை | எனக்கேன் | தந்தனை | - இறைவா | |
ஆயுள் | முழுதுமா | நிந்தனை! |
உண்டா – இல்லையா?
அந்திமாலை | வந்தபோது |
அங்குதென்றால் | தொட்டபோது |
இந்தமாமன் | நினைப்புனக்கு |
வந்த | தில்லையா? |
தூக்கமின்றி | கண்தவிக்க |
ஏக்கத்திலே | மனந்தவிக்க |
தீக்குளித்த | உணர்விலே நீ |
நொந்த | தில்லையா? |
கொந்தளிக்கும் | கடலைப் போல |
குமுறுகின்ற | மேகம்போல |
தத்தளிக்கும் | படகுபோல |
ஆட | வில்லையா |
பொன்சிவந்த | முகத்தினிலே |
பூ” சிதறும் | தேன்துளிபோல் |
கண்கசிந்து | என்னையெண்ணி |
வாட | வில்லையா? |
மன்மதனும் | வில்லெடுத்து |
மலர்க்கணையை | வீசும்போது |
உன்மனதில் | என்னுறவு |
தீண்ட | வில்லையா? |
முல்லை” நீலம் | ‘மா’ அசோகு |
தாமரைசேர் | ஐ மலர்கள் |
மோக தாக | விரக வேகம் |
தூண்ட | வில்லையா? |
ஆட்டிவைக்கும் | உணர்வு பொங்கி |
அடங்கிடாமல் | மீறும் போது |
போட்டிபோட்டு | என்நினைப்புத் |
தாக்க | வில்லையா? |
பூகம்பத்தின் | நெருப்பலைகள் |
சுனாமி போல | சீறிப்பாய்ந்து |
புரட்டிப்போட்டு | வறுத்தெடுத்துத் |
தீய்க்க | வில்லையா? |
மாது நீயும் | மனத்திரையில் |
சூது கொண்டு | மறைத்திதனை |
ஏதுமறி | யாதவள்போல் |
ஏங்க | வில்லையா? |
உண்டா – | இல்லையா? |