Skip to content
நரிபுடிச்சோம் | முயல்புடிச்சோம் | காடைபுடிச்சோம் | ஆயாலோ! |
காணாங்கோழி | கூழக்கடா | மான்புடிச்சோம் | ஆயாலோ! |
கொம்புநகம் | பல்லுதோலு | வாலுவிப்போம் | ஆயாலோ! |
வம்புவாது | சூதுபொய்யி | பேசமாட்டோம் | ஆயாலோ! |
| | | |
கூட்டம்கூடி | டப்பாதாளம் | ஆட்டம்போடுவோம் | ஆயாலோ! |
குடுத்தகஞ்சி | காசுவாங்கி | கும்புடுவோம் | ஆயாலோ! |
இப்பஎங்க | நெலமைவேறே | இதுதெரிமா | ஆயாலோ! |
பாசிமணிகள் | ஊசிவித்துப் | பணம் | குமிக்கிறோம் |
| | | |
அரசுதந்த | கெட்டிவீட்டுல | அண்டிக்கிட்டோம் | ஆயாலோ! |
அங்கேநாலு | வாழைதென்னை | வச்சுப்புட்டோம் | ஆயாலோ! |
கரண்டுவௌக்கு | டிவிரேடியோ | குடிநீரோட | ஆயாலோ! |
கட்டித்தந்தார் | பள்ளிக்கூடம் | படிச்சுப்புட்டோம் | ஆயாலோ! |
| | | |
பள்ளிப்படிப்பை | நாங்கபடிச்சோம் | பாட்டன்போல | இல்லீங்க |
பக்குவமா | உலகத்தோட | ஒட்டிக்கிட்டோம் | ஆயாலோ! |
வேட்டிகட்டி | சட்டைமாட்டி | வெளியேவாரோம் | ஆயாலோ! |
வெட்டிப்புட்டோம் | குடுமியைத்தான் | குளிக்கிறொமை | ஆயாலோ! |
| | | |
கல்யாணவீடு | போறதில்லை | எலைஎடுக்கலே | ஆயாலோ! |
எங்கவிட்டுலே | கல்யாணத்திலே | எலைச்சாப்பாடு | ஆயாலோ! |
சாமிசாமி | நாங்கசொன்னோம் | சிச்சியின்னிங்க | ஆயாலோ! |
சமத்துவமா | மதிக்கயிப்போ | ஒசந்துபுட்டோம் | ஆயாலோ! |
| | | |
கூட்டுறவுலே | அரிசிபருப்பு | கொடுக்கிறாக | ஆயாலோ! |
ஓட்டுப்போடும் | உரிமைகூட | இருக்குதுங்க | ஆயாலோ! |
காட்டுநரிக் | குறவர்இப்போ | நெறிக்குறவரா | ஆயிட்டோம்! |
கருணையோட | அரசாங்கந்தான் | காத்துவருது | ஆயாலோ! |
| | | |
காடுவேலை | கழனிவேலை | களத்துமேட்டுலே | ஆயாலோ! |
கருத்தைமாத்தி | உழைக்கிறதைக் | காணவாங்க | ஆயாலோ! |
கூத்தாடிவயல் | அறந்தாங்கியிலே | திருச்சிதேவ | ராயநேரி |
குடியிருக்குறோம் | நாற்பதாண்டா | பிழைத்திருக்கிறோம் | ஆயாலோ! |
ஆக்குவதும் | காப்பதுவும் | அழிப்ப | தெல்லாம் |
ஆண்டவனின் | செயலென்று | அன்றே | சொன்னார்! |
ஆக்குவது | அவன்செயல்தான்; | நம்மால் | இல்லை |
ஆக்கியநல் | உயிர்,பொருளை | யார்காக் | கின்றார்! |
ஆக்கமுடன் | உயிரினங்கள் | உழைத்து | ழைத்து |
அரும்பாடாய் | உயிர்,பொருள்கள் | காக்கக் | கண்டோம் |
நீக்கமற | இறையவனே | காப்பா | னென்றால் |
நிறை,குறைகள் | நிந்தனைஏன்? | தீர்ப்பு | உண்டா? |
| | | |
ஒருவன்மற் | றொருவனுயிர் | போக்கி | விட்டால் |
ஊருலகம் | கொலைகாரன் | என்றே | சொல்லும்! |
ஒருகொலைக்கே | சிறையுண்டு; | தூக்கு | உண்டு! |
ஓருயிரா? | ஜப்பானில் | சென்டாய் | மினாமி |
பெருநகரே | அழிந்துபட | சுனாமி | தந்த |
பெருந்துரயம்; | இருபதினா | யிரவர் | மாண்டார்! |
விரும்பித்தான் | இறைவன்கொலை | செய்கின் | றானா? |
விடையிலையா? | பொறுப்பாளி | இதற்கில் | லையா? |
| | | |
வீடுமுதல் | கார்கப்பல் | ரயில்வி | மானம் |
விரிவாக்க | அணுவுலைகள் | பெட்ரோல் | டீசல் |
தேடறிய | விஞ்ஞான | சாத | னங்கள் |
திகைப்பூட்டும் | தொழில்நுட்பம்; | அனைத்தும் | வீழ்த்தி |
நாடழித்துப் | போட்டசெயல் | நன்றோ; | தெய்வம் |
நன்மைசெயத் | தானுண்டு; | இதுவோ | கொடுமை! |
வாடிடுதே | மக்கள்மனம் | உலக | மெங்கும்! |
வடிக்கிறதே | கண்ணீர்;இறை | அறிந்தா | லென்ன? |
| | | |
போர்வெறிகொண் | டமெரிக்கா | ஜப்பான் | நாட்டில் |
போட்டஅணு | குண்டாலே | மூன்று | லட்சம் |
பேர்மாண்டார்; | ஹிரோஷிமா, | நாக | சாஹி, |
பெருந்துயரைக் | கண்டது;பின் | மீள | லாச்சு! |
வேரறுத்த | அமெரிக்கா | குனிய | லாச்சு! |
வீழ்ந்துபட்ட | ஜப்பானோ | நிமிர | லாச்சு! |
சீரழித்தாய் | சுனாமியே | ஜப்பான் | மீளும்! |
சீருபெரும்; | பேருபெறும்; | உலகம் | காணும்! |
| | | |
போனவுயிர் | மீண்டிடுமா? | பால்கு | டித்த |
பிஞ்சுமுதல் | வயோதிகரை | அழிக்க | லாமா? |
நாணமிலாச் | செயலன்றோ; | தெய்வத் | திற்கோ |
நற்கருணை | சிறிதில்லை; | உலகே | தூற்றும் |
ஈனசெயல்; | சுனாமியே | தாக்க | லாமா? |
எங்கள்தமிழ் | நாட்டோடு | இலங்கை | சேர்த்து |
போனமுறை | நீயழித்தாய்; | ஜப்பான் | இன்று |
புதைகுழியாய் | மாறியதே | இனிவா | ராதே! |
| | | |
சாகாமல் | வாழ்ந்தவர்கள் | யாரும் | இல்லை! |
சாவுக்கும் | விதிமுறைகள் | வகுத்தாய் | நீயே |
சாவுக்கு | அஞ்சியஞ்சும் | காலம் | போச்சு! |
சாவுண்டு; | இதையறிந்தே | வாழு | கின்றோம்! |
தீவுமுழு | தாய்அழித்தாய்; | ஜப்பான் | நாட்டார் |
தீமையவர் | செய்ததென்ன? | கொடுமை | யன்றோ |
சாதிக்கப் | பிறந்தவர்கள்; | ஜப்பான் | நாட்டை |
சாவுலகு | அனுப்பிடினும் | மீண்டும் | வெல்வார்! |
ஒடிச்சுப் | போட்ட | இலையைத் | தின்னு |
ஊத்தி | வச்ச | கழனிகுடிச்சு | |
ஒங்கபின்னே | சுத்திவந்த | ஆடுங்க | –நாங்க |
உண்மையிலே | நம்பிவந்தோம் | பாருங்க | |
| | | |
கெடயைப் | போட்டு | வயல் | வெளியிலே |
புளுக்கை | சிறுநீர் | எருவா | மாத்தி |
விடிஞ்சதுமே | தண்ணிகாட்டி | விட்டீங்க | –எங்களை |
விரட்டிநல்லா | புல்வெளியிலே | விட்டீங்க | |
| | | |
ஆத்து | ஓரம் | காட்டு | ஓரம் |
அருகி | ருக்கும் | செடியின் | ஓரம் |
மாத்திமாத்தி | மேயவிட்டீங்க | எங்களை | –நாங்க |
மறக்கமாட்டோம் | உயிருள்ளவரை | உங்களை | |
| | | |
நம்பி | வந்த | எங்க | ளுக்கு |
நல்ல | தையே | செய்த | நீங்க |
அன்புகாட்டத் | தவறினது | என்னங்க | –கழுத்தை |
அறுத்துயெங்கள் | உயிர்பறிப்பது | என்னங்க | |
| | | |
காலு | நாலைக் | கட்டிப் | போட்டு |
கழுத் | தறுத்த | போது | முங்கள் |
கருணையைத்தான் | நினைச்சிருப்போம் | அய்யாவே | –நாங்க |
கதறுவதுஉங்க | நினைப்பிலே | மெய்யாவே | |
| | | |
காந்தி | புத்தர் | மகா | வீரர் |
கருணை | ராம | லிங்க | அடிகள் |
சாந்திமார்க்கம் | சத்தியத்தைச் | சொன்னீங்க | –எங்களைச் |
சந்தைக்கடையில் | கழுத்தறுத்துக் | கொன்றீங்க. | |
| | | |
உலகத் | திற்கே | சாமா | தானம் |
ஒற்று | மையோ | டிஹிம்சை | கூறி |
கலகமின்றி | கொலைதடுத்தது | நீங்கதான் | –எங்களை |
கழுத்தறுத்து | போடுறதும் | நீங்கதான். | |
| | | |
காட்டில் | வாழும் | மிருகங் | களும் |
ஓடி | ஒளிந்து | பிழைக் | குதுங்க |
வீட்டில்உங்க | கூட | வாழ்ந்தோம் | நாங்களே |
வெட்டிப்பலி | கொடுபபதுவோ | நீங்களே | |
ஆயிரமா | யிரம்தேனீ | காலை | மாலை |
அலைந்தலைந்து | பூவமர்ந்து | எடுத்த | தேனை |
ஆயிரமா | யிரம்அறைசேர் | கூட்டுக் | குள்ளே |
அன்றாடம் | சிறுசிறுக | சேர்த்து | வைக்கும்! |
ஏழைசிறு | உண்டியலில் | காசைப் | போட்டு |
எப்போது | நிறையுமெனக் | காத்தி | ருப்பான்! |
ஏழையிவன் | உண்டியலைத் | திருடன் | கொண்டால் |
என்னாகும்; | தேனியையும் | இணைத்துப் | பாரீர்! |
தேன்கூட்டைக் | கட்டியதற் | கார்தான் | தந்தார்! |
தேனெடுத்து | யாரதற்குச் | சேர்த்துத் | தந்தார்! |
ஊனுறக்க | மின்றிமலர் | மலர்க்குத் | தாவி |
ஓய்வின்றி | உழைத்ததுவும் | தேனீ | யன்றோ! |
வான்மழையில் | கடும்வெயிலில் | வறட்டுக் | காற்றில் |
வகைதொகையாய்க் | காத்திருந்த | தெவரோ | சொல்வீர்! |
மானமொடு | எவருதவி | தயவும் | இன்றி |
மாண்புடனே | வாழுவதும் | தேனீ | யன்றோ! |
மாடெருமை | ஆடுபசு | குருவி | கோழி |
மனிதனதற் | குணவளித்துக் | காப்ப | துண்டு |
பாடதற்கு | மனிதனவன் | படுவதாலே | |
பல | வகையில் | பங்கெடுக்கும் | உரிமை |
கேடெவர்க்கும் | எண்ணாமல் | அடிமை | யின்றி |
கிடைத்ததேன் | உண்டுவாழ் | கின்ற | தேனீ |
கூடழித்தான்; | தேனெடுத்தான்; | மனிதன் | உண்டான் |
கொள்ளையிது! | பெருங்கொடுமை!! | மாற்று | காண்பீர்! |
பூமியிலே | அழகழகாய்ப் | புற்று | தோன்றும்! |
புனிதமிகும் | கோபுரம்போல் | உயர்ந்து | காணும்! |
சாமியில்லை | புற்றுக்குள்; | எறும்புக் | கூட்டம் |
சமத்துவத்தை | ஒற்றுமையை | மனிதர் | கட்கு |
காமிக்கும் | வகையாக | வாழ்ந்து | காட்டி |
கருத்துடனே | கூட்டுறவின் | உயர்வை | நாட்டும்! |
சேமிக்கும் | பழக்கத்தை | மனிதர் | கட்டு |
சொல்லியதே | எறும்புகளின் | கூட்டம் | தானே. |
அலையலையாய் | சுறுசுறுப்பாய் | அங்கும் | இங்கும் |
அலைந்தலைந்து | உணவுகளைத் | திரட்டி | வந்து |
வலைக்குள்ளே | சேமித்து | மழைக்கா | லத்தில் |
வாழ்வதற்கு | வழிகண்ட | எறும்புக் | கூட்டம் |
மலையளவு | அறிவுரையை | மனித | னுக்கு |
மணிமணியாய்த் | தந்ததுவும்; | கூட்டு | வாழ்க்கை |
குலையாமல் | வாழ்ந்துகாட்டி | ஒரேபுற் | றுக்குள் |
குறைவின்றி | வாழ்வதுவும் | எறும்பு | தானே! |
புற்றதற்குக் | கட்டுதற்குக் | கற்றுத் | தந்த |
பொறியாளர் | எவருண்டு; | போர்க்கா | லத்துப் |
பற்றுடைய | வீரன்போல் | பரப | ரத்துப் |
பாங்குடனே | சிறுவாயில் | மண்சு | மந்து |
பொற்கொல்லர் | நகைசெய்தல் | போலே | அந்தப் |
புற்றுதனைக் | கட்டுவது | அடடா! | அந்தப் |
பொற்புடைய | சாதனைகள் | மனித | னுக்குப் |
பொறுமைக்கும் | திறமைக்கும் | சவாலே | யன்றோ! |
மன்னன்தன் | நாட்டிலுள்ள | மக்கள் | காக்க |
மகத்தான | கோட்டையதை | கட்டி | ஆங்கே |
எண்ணற்ற | தானியங்கள் | களஞ்சி | யத்தில் |
எப்போதும் | வைத்திருப்பான்; | பசிபஞ் | சங்கள் |
தன்னாட்டு | மக்களினைத் | தாக்கா | வாறு |
தடுத்தாள்வான் | போர்க்காலம் | காப்பான். | இந்த |
பொன்னரிய | தத்துவத்தை | மனித | னுக்குப் |
புகட்டியது | புற்றுகளும் | எறும்பும் | தானே! |
போரில்லா | ஓருலகம் | புற்றுக் | குள்ளே |
புரிந்துசெயல் | படுகின்ற | தலைமை | அங்கே |
நீருக்கும் | நிலத்திற்கும் | சண்டை | இல்லை! |
நீபெரியன் | & | நான்பெரியன் | & |
யாருணவை | யார்பறித்தல் | பதுக்கல் | இல்லை! |
யாவருக்கும் | சமச்சீர்தான் | புதுமை | ஆட்சி |
ஊருலகைக் | கட்டியாளும் | மனிதன்; | இந்த |
ஒப்புமைஇல் | லாச்செயலைப் | போற்ற | வேண்டும்! |
முன்னேற்றம் | வேண்டுமென்ற | முனைப்புக் | கொள்ளு! |
மூவுலகும் | துணைநிற்கும் | விழித்துக் | கொள்ளு! |
உன்னேற்றம் | உன்எழுச்சி | முயற்சி | யாலே |
உலகையே | துயிலெழுப்பு; | செயல்கள் | செய்நீ! |
கண்ணோட்டம் | கருத்தோட்டம் | புதுமை | யாக்கு! |
காலடியில் | உலகமே | சுழலும் | காண்பாய்! |
முன்னோட்டப் | படிக்கட்டில் | முந்தி | நில்லு! |
முப்பிறப்பின் | பலனிப்போ | உன்னைத் | தேடும்! |
| | | |
விலைகொடுத்தும் | வினைமுடிக்கும் | துணிவு | வேண்டும்! |
வீராப்பு | வெறும்பேச்சு | வென்றி | டாது! |
மலையேற | வேண்டுமெனில் | வலிமை | வேண்டும்! |
மனத்துணிவு | நம்பிக்கை | உறுதி | வேண்டும்! |
நிலைஉயர | வேண்டுமெனில் | உழைக்க | வேண்டும்! |
நெறிதவறாக் | குறிதவறா | முயற்சி | வேண்டும்! |
அலையைப்போல் | முன்னோக்கும் | ஆற்றல் | வேண்டும்! |
அது | உனக்குத் | தரும்வெற்றி! | தோல்வி |
| | | |
நேர்மையுடன் | உழைத்துப்பார்! | நெஞ்சு | தூக்கி |
நித்தம்நீ | பாடுபடு! | வெற்றி | உன்னை |
ஓர்மையுடன் | தேடிவரும்! | உலகம் | உன்னை |
உத்தமனாய் | அடையாளம் | காட்டும்! | காண்பாய்! |
சீர்மைக்குச் | சிறுமையே | இல்லை; | நீயும் |
சிந்தித்துச் | செயத்தக்க | செய்து | பாரு! |
வேர்வைக்குத் | தான்வெற்றி! | ஏய்ப்போர்க் | கல்ல! |
வியந்துயர்த்தும் | உலகம்உனைப் | போற்றிப் | பாடும்! |
ஆண்சாதி | பெண்சாதி | இரண்டே | யன்றி |
அடுக்கடுக்காய்ச் | சாதிகள்ஏன்? | ஒழிந்தா | லென்ன? |
தான்சாதி | தானுயர்வு | மற்ற | சாதி |
தாழ்ந்ததெனும் | நிலையழிந்து | போனா | லென்ன? |
வீண்சாதி | பேசுவதால் | மோதல் | சாதல் |
விடிவில்லா | பாழிருட்டே | சேர்க்கும்; | இந்த |
தான்தோன்றி | சாதிமுறை | வேண்டாம்; | நாட்டில் |
சமத்துவத்தைப் | பயிர்செய்வோம்; | அமைதி | சேர்ப்போம்! |
| | | |
எத்தனையோ | நூற்றாண்டாய் | சாதி | பேசி |
இப்புனித | மனிதத்தைச் | சீர | ழித்தார்! |
வித்தகமாய் | நால்வருண | குலஆச் | சாரம் |
வேரூன்ற | மனிதகுலம் | வீழ்த்திச் | சாய்த்தார்! |
கொத்தடிமை | ஏற்றத்தாழ் | விகழ்ச்சி | பேசி |
கொடுஞ்செயலாம் | தீண்டாமை | தூண்டி | விட்டார்! |
சத்துணவில் | “சமத்துவ | புரத்தில்” | “பஸ்ஸில் |
சந்தையினில்” | சமச்சீரில்” | உண்டோ | சாதி |
| | | |
கடைபோட்டு | சாதிவெறி | வளர்க்க | லாமோ |
கண்மூடித் | தனம்விட்டு | விழித்தா | லென்ன? |
நடைபோட்டுச் | சட்டத்தின் | துணையி | னோடு |
நாளுமதைக் | காப்பதுவும் | நீதி | தானா? |
விடைகண்ட | பலதலைவர் | சாதி | வாரி |
வியூகங்கள் | ஆய்கின்றார் | ஞாயம் | தானா? |
தடைவேண்டும்; | இனம்ஒன்றே | ஆக்கல் | வேண்டும்! |
தப்பேது | சமுதாயம் | நிமிர | வேண்டும்! |
| | | |
மனிதமுண்டு | சாதியில்லை | என்றே | கூறும் |
மகத்தான | நாள்வரும்நாள் | எந்த | நாளோ? |
அணிதிரண்டு | சாதிவாரி | போர்கள் | செய்வோர் |
அதைமறந்து | ஓரணியில் | திரள்வ | தெந்நாள்? |
பிணியொத்த | சாதிசதி | ஒழிந்த | தென்றே |
பிரகடணப் | படுத்தும்நாள் | எந்த | நாளோ? |
கனியிருக்கக் | காய்கவர்தல் | தீர்வ | தெந்நாள்? |
கருமுதலே | சாதியின்றிப் | பிறப்ப | தெந்நாள்? |
மூடப் | பழக்கத்தை | மூடு | – வாழ்வின் |
முன்னேற்ற | வழித்தடத்தை | நாடு! | |
ஓடிப் | பொருள்புகழ் | தேடு | – அயரா |
உழைப்புதான் | உயர்வென்று | பாடு! | |
| | | |
எவரெவரும் | சமமென்று | ஆக்கு | – நாட்டில் |
ஏழைபணக் | காரன்நிலை | நீக்கு! | |
தவறாது | கல்விதொழில் | ஊக்கு | – ஆய்ந்து |
தளிர்க்கட்டும் | இளைஞர்மனப் | போக்கு! | |
| | | |
வளரவிடு | புதுமைகளைப் | பற்றி | – அது |
வழிதிறந்தால் | உலகுபெறும் | வெற்றி! | |
புலரட்டு | அறிவுலகம் | பெற்றி | – ஆங்கே |
போய்மறையும் | பேதமைகள் | வற்றி! | |
| | | |
பஞ்சமினி | யில்லெயெனச் | சொல்லு | – ஆன்ற |
பகுத்தறிவால் | உலகத்தை | வெல்லு! | |
துஞ்சுவதை | கெஞ்சுவதைக் | கொல்லு | – எதிலும் |
துடிப்போடு | முன்னேறி | நில்லு! | |
| | | |
நம்பிக்கை | கொண்டு | நீவாழு | – அறிவு |
நன்மைதரும் | இன்பமெலாம் | சூழும்! | |
தெம்புகொள் | உறுதியுனை | ஆளும் | – எட்டுத் |
திசைமுழுதும் | புகழ்பரவி | நீளும்! | |
இனிஎவரும் | அணிமாறி | ஆட்சிக் | கட்டில் |
ஏறிடலாம்; | தமிழ்நாட்டில் | ஏழை | பெற்ற |
கனிபோன்ற | திட்டத்தை | நிறுத்தி | டாமல் |
கண்டிப்பாய் | தொடர்ந்ததனை | செயத்தான் | வேண்டும்! |
நனிமிக்க | சாணக்யன் | அர்த்த | சாஸ்த்ரம் |
நவிலுகிற | ஆட்சிமுறை | இதையே | சொல்லும்! |
எனக்கென்ன | என்றிருந்தால்; | ஆட்சி; | வீழ்ச்சி |
எவ்வழியோ | நடந்திடலாம்; | வரலா | றுண்டு! |
| | | |
கொலைகளவு; | கற்பழிப்பு; | ஜாதி | மோதல் |
கட்டப்பஞ் | சாயத்து; | கந்து | வட்டி |
தலைமுறையை | அழித்தொழிக்கும் | குடிப்ப | ழக்கம்! |
தனைமறக்கும் | அபின்கஞ்சா | போதைப் | பாதை |
நிலைகுலைக்கும் | கடத்தல்கலப் | படப்ப | துக்கல் |
நெறிதவறும் | நீதிமுறை | கள்ள | நோட்டு |
விலைபோடும் | கொத்தடிமை | சிறார் | கொடுமை! |
வறுமையினைப் | பஞ்சத்தை | ஒழிக்க | வேண்டும்! |
| | | |
மத்தியிலே | ஆட்சிமொழி! | நீதி | மன்றில் |
வழங்குமொழி | தமிழ்வேண்டும்! | சென்னை | தன்னைச் |
சுற்றிலுமே | துணைநகரம் | அமைக்க | வேண்டும்! |
திருக்குறள்தே | சியநூலாய் | ஆக்க | வேண்டும்! |
வற்றாத | நதிகளையே | ஒன்றாய் | ஆக்கி |
வளம்மிகுந்த | தமிழகமாய் | உயர்த்த | வேண்டும்! |
வெற்றுரைஏன் | மெட்ரோரயில் | சேதுத் | திட்டம் |
வியக்கும்வகை | செயல்படுத்தி | ஆள | வேண்டும்! |
| | | |
மின்சாரம் | பெருக்கிடவே | திட்டம் | வேண்டும்! |
மிகுமின்சார | ரம்பிறர்க்கு | விற்க | வேண்டும்! |
தென்சாரல் | மலையோரம் | காற்றா | லைகள் |
திசையெங்கும் | அனல்புனல்சூ | ரியமின்சாரம் | |
தன்சாரம் | பார்க்காமல் | பெருக்க | வேண்டும்! |
தகுதிமிகு | பெருந்தொழிலின் | அதிபர்; | மற்றும் |
பொன்சாரம் | கோபுரத்தில் | போர்த்தும் | தக்கார் |
போன்றவரை | முதலீட்டார் | ஆக்க | வேண்டும்! |
| | | |
காவிரிநீர்த் | தாவாவைத் | தீர்க்க | வேண்டும்! |
கல்வியில் | சமச்சீர்தான் | ஓங்க | வேண்டும் |
மேவிய”தை” | முதலே | தமிழ் | ஆண்டு |
மேலும்பல | காட்டாற்றில் | அணைகள் | வேண்டும்! |
தாவிவரும் | மழைநீரை | ஏரி | குளத்தில் |
தடுத்தாளக் | கரையுயர்த்த | வேண்டும்; | மேற்கே |
பாய்நதியைக் | கீழ்திசையில் | திருப்ப | வேண்டும்! |
பரிந்துரையால் | பெரியார்அணைத் | தீர்வு | வேண்டும்! |
| | | |
கடற்கரையில் | நதிக்கரையில் | கூவம் | ஓரம் |
காலமெலாம் | வாழ்வோரின் | நிலையு | யர்த்தி |
இடர்பாடு | இலாநிலையில் | வாழு | தற்கு |
ஏற்றதொரு | வழிகாண | வேண்டும்; | உழவர் |
தொடர்வருவாய் | பெற்றுயர்ந்து | வாழத் | தக்க |
திட்டங்கள் | வகுத்திடவும் | வேண்டும்; | நாட்டை |
அடர்வருவாய் | மாநிலமாய்த் | தொழில்கள் | கூட்டி |
ஆண்டிடவும் | வேண்டும்என் | வேண்டு | கோளே! |
| | | |
அதிகாரம் | “அதி” | “காரம்” | ஆய்வி |
அகங்காரம் | ஆணவங்கள் | ஓங்கி | டாமல் |
விதிமீறல், | லஞ்சமொடு, | ஊழல் | தன்னை |
விளைக்காமல் | அரசுவழி | தொடர | வேண்டும்! |
விதிப்பயனே | என்றிருந்த | காலம் | போச்சு |
விம்முகிற | நிலை; | ஏழை | பெறுவா |
கொதிப்படக்க | வல்லவர்கள் | எவரும் | இல்லை! |
குறியிடுவார்! | வாக்களிப்பார்! | ஆட்சி | மாறும்! |
| | | |
வேண்டுதல்வேண் | டாநிலையை | ஏற்றி | டாமல் |
விருப்புவெறுப் | பிலாநிலையை | போற்றி | டாமல் |
தூண்டுதல்செய் | அறநெறியை | அறிஞர் | கூற்றைத் |
துச்சமென | இகழ்ந்ததனால்; | இடிப்பா | றின்றி |
மாண்டழிந்த | ஆட்சிபல | உண்டு; | இதுதான் |
வரலாறு; | ஆள்பவர்கள் | உணர | வேண்டும்! |
ஆண்டழிந்தான் | இராவணனே! | விபீச | னன்தன் |
அறிவுரைகள் | ஏற்கவில்லை; | முடிவு | என்னே? |
நெல்லொன்று | முளைக்குமே; | கிளைஏழு | விரிக்குமே |
கதிரொன்றில் | நூறுநெல்; | கிளைஏழும் | விளைக்குமே! |
சொல்லொன்று | விரியுமே; | பொருள்நூறு | சிரிக்குமே! |
செம்மொழியாம் | நம்தமிழின் | சிறப்பதிலே | இருக்குமே! |
எள்ளியொரு | குப்பையிலே | எடுத்தெரிந்த | கொட்டையுமே |
தளிர்த்தங்கு | வளர்ந்தொருநாள் | மாங்கனிகள் | தருதல்போல் |
நல்லிதய | மில்லாத | நரிக்கூட்டம் | நம்தமிழை |
அள்ளியெறிந் | தழித்தார்கள் | இதுதானே | வரலாறு! |
ஆரியர்கள் | களப்பிரர்கள் | வடுகரொடு | மராட்டியர்கள் |
அடுத்தடுத்து | இசுலாமியர் | ஆங்கிலேயர் | தொடர்கதைபோல் |
சீரியநம் | தமிழழித்து | அவரவர்கள் | மொழிதனையே |
சிம்மாசனம் | ஏற்றியுமே | செந்தமிழைப் | புறக்கணித்தார்! |
மாறியது | அவர்களது | ஆட்சியதி | காரங்கள் |
மாறவில்லை; | மாற்றமில்லை; | அழிவில்லை | தமிழுக்கு |
தேறியது; | செந்தமிழும் | செம்மொழியாய் | உலகறிய |
செழித்ததுவும்; | வளர்ந்ததுவும்; | தழைத்ததுவும் | தமிழ்தானே! |
தொல்காப்பியர் | இளங்கோமுதல் | ஈரடியார் | நாலடியார் |
நாயன்மார் | சித்தர்முதல் | நற்சங்கப் | புலவர்களும்! |
ஒல்காப்புகழ் | கம்பரம்பி | காபதியொட்டக் | கூத்தர் |
வில்லியோடு | நக்கீரர் | புகழேந்தி | அவ்வையார் |
திரிவட | ராசப்பர் | சுப்ரதீபக் | கவிபோல்வார் |
அரிதான | தமிழ்காத்து | அரியணையில் | ஏற்றினார்கள்! |
தென்னாட்டு | மன்னர்பலர் | புலவர்களின் | புரவலராய் |
எந்நாளும் | காத்ததனால் | செந்தமிழும் | செழித்ததன்றோ! |
காற்றடித்தால் | நாணலது | கண்டிப்பாய் | ஒடியாது! |
கயவர்கள் | சூழச்சியினால் | கன்னித்தமிழ் | அழியாது! |
சீற்றமிகு | “கடற்கோளில்” | சிக்கிப்பின் | மீண்டதுவே |
முடத்திருமா | றன்மூலம் | கடைச்சங்கம் | கண்டதுவே! |
முதற்சங்கம் | இடைச்சங்கம் | மூழ்கினும் | தமிழ்மட்டும் |
வாழ்கிறது | கன்னியாக | வற்றாத | இளமையோடு |
மொழியடிமை | கொள்ளுதற்கு | முனைந்தார்அறு | பத்தைந்தில் |
முழுமூச்சில் | பலபேர்கள் | உயிர்தந்து | தமிழ்காத்தார்! |
சங்கத்தில் | வளர்ந்ததமிழ்! | தாய்மடியில் | தவழ்ந்ததமிழ்! |
சிங்கத்தின் | நடைபோட்டுச் | சிம்மாசன | மிருந்த |
பொடுங்கருவி | எனப்புலவர் | பொன்னாவில் | தழைத்ததமிழ்! |
புதுமையெழில் | கன்னியெனப் | பூத்திருக்கும் | இனிய |
மங்காத | செம்பொன்னாய் | மணிமுத்தாய் | ஒளிகாட்டி |
எங்களது | வாழ்வோடு | இணைந்திட்ட | சடர்மணியே! |
திங்களிளம் | பருதிகாற்று | வானமொடு | பூமிபோல |
செந்தமிழே | நீ | வாழ்க! | செம்மொழியே |
Back to Top